போரூர் மின் மயானத்தில் சென்னை கே.கே.நகரில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அஸ்வினி உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உறவினர்கள், உடலை வாங்கிச் சென்றனர். வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அஸ்வினி உடலுக்கு அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை 4 மணிக்கு அஸ்வினியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் […]
திமுக எம்.பி. கனிமொழி , பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது, பாதுகாக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்தால் பெண்கள் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தன் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவில், ”சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் போலீஸார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து […]
நடிகை கஸ்தூரி ட்விட்டரில் , அஸ்வினி கொலையில் திரைப்படங்களுக்கும் பொறுப்பு உண்டு’ என தெரிவித்துள்ளார். கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரி வாசலி, அஸ்வினி என்ற மாணவி தன்னுடைய முன்னாள் காதலர் அழகேசனால் நேற்று கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள நடிகை கஸ்தூரி, திரைப்படங்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். “ஸ்வாதி, சித்ராதேவி, அஸ்வினி… இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்களை காவு கொடுக்கப் போகிறோம்? காதல் என்ற […]
அமைச்சர் பெஞ்சமின் சென்னையில் நேற்று கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஸ்வினியின் தாய் மற்றும் உறவினர்களுக்கு பெஞ்சமின் ஆறுதல் தெரிவித்தார். சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கலை கல்லூரி மாணவி அஸ்வினி நேற்று குத்திக்கொலை செய்யப்பட்டார். அழகேசன்(24) என்ற இளைஞரால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். இதனையடுத்து பொதுமக்கள் அவரை துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.அடுத்தகட்ட விசாரணையானது நடைபெற்று வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ், சென்னையில் நேற்று காதல் விவகாரம் தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஷ்வினிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். பி.காம் முதலாமாண்டு சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் படித்து வரும் அஸ்வினி நேற்று அழகேசன் என்பவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அழகேசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர செயல் குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ், காதல் எனும் பேரில் நடைபெற்ற […]
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். பகுத்தறியும் பண்பான இளம் தலைமுறையால் தமிழகம் தலைநிமிர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மனிதநேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத, இத்தகு வன்செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்று […]
போலீஸ் விசாரணையில், சென்னையில் குத்திக் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி கொலை வழக்கில் கொலையாளி அழகேசனால் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும், வீட்டுக்கே சென்று கட்டாயத் தாலி கட்ட முயன்றதும் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது. சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம். படித்து வந்த மாணவி அஸ்வினி தான் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர். இந்தக் கொலையை செய்த இளைஞர் பொதுமக்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கொலை நடந்தது குறித்து அப்பகுதியில் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் […]