Tag: #Ramanathapuram

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலமாகும், இது ரூ.550 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், இன்று துவக்கி வைக்கப்பட்ட பாம்பன் பாலம்தான் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு […]

#BJP 4 Min Read
NarendraModi- Rameswaram

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே சுமார் ரூ.550 கோடி செலவில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தப் பின்,  ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, ‘வணக்கம், என் அன்பு தமிழ் சொந்தங்களே’ எனக்கூறி தமிழில் உரையை தொடங்கினார். இந்த விழாவில், விழாவில் ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் பங்கேற்றனர். விழாவில் […]

#BJP 6 Min Read
pm modi

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே சுமார் ரூ.550 கோடி செலவில், 2.08 கி.மீ நீளத்துக்கு இந்த புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர், சாலை பாலத்தில் இருந்து ஒரு ரயிலையும், கப்பலையும், புதிய பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் […]

#BJP 6 Min Read
Pamban - modi

வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில் சென்ற போது, சாலையோரம் திரண்டுள்ள பொதுமக்களை பார்த்து கையசைத்தார். தமிழகம் வந்தைடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நவாஸ்கனி எம்.பி., ராமநாதபுரம் ஆட்சியர் ஆகியோரும் வரவேற்றனர். பாரம்பரிய உடையான பட்டு […]

#BJP 5 Min Read
pambanbridge -PMModi

மீண்டும்.. மீண்டுமா? தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், ஒரு படகில் கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 10 பேரை கைது செய்ததோடு, படகையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றது. கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை […]

#Arrest 4 Min Read
tn fishermen arrest

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஜனவரி இறுதி வரை தொடர்ந்து வருகிறது. நேற்று முதல் தமிழக்த்தில் தென் தமிழகம் மற்றும் மயிலாடுதுறை , சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது. நேற்று மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]

#Chennai 3 Min Read
TN Heavy rain

இந்த 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு […]

#Chennai 3 Min Read
heavy rain tn

1 மணி வரை இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரம் அதாவது 1 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

#Chennai 2 Min Read
rain news tn

மேகவெடிப்பு : கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளக்காடாக மாறிய ராமேஸ்வரம்!

ராமநாதபுரம் : வளிமண்டல சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினத்தில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மலையில் ராமேஸ்வாரத்தில் மிகவும் கனமழை பெய்த நிலையில், தற்போது சில பகுதிகளில் கனமழை விட்டு விட்டு வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வாரத்தில் பல இடங்களில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. அதைப்போல, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் கனமழை காரணமாக தெற்குவாடி பகுதியில் கடல் அரிப்பு […]

#Ramanathapuram 3 Min Read
rameswaram rain

பாம்பனில் வெளுத்து வாங்கும் கனமழை! காரணம் என்ன?

சென்னை : குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது . ஏற்கனவே, தென் தமிழகத்தில் அதிகனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. திருவாரூர், நாகப்பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை […]

#Ramanathapuram 3 Min Read
Heavy rain in Ramanathapuram Heavy rain

70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சென்னையில் பறிமுதல்.! 3 பேர் கைது.!

சென்னை : மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 27ஆம் தேதி சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்று அங்கிருந்த்து கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்த உள்ளதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சென்னை கிளாம்பாக்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அவர் பெயர் பைசல் ரகுமான் என்பதும், அவரிடம் […]

#Arrest 3 Min Read
Arrest

மக்களவை தேர்தல் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்.! 

சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக களமிறங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) கட்சி வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றார். 2019 தேர்தலை போலவே இம்முறையும் நாவாஸ் கனி வெற்றி பெற்று இருந்தார். அவருக்கு ஆதரவாக 5,09,664 வாக்குகள் பதிவாகி இருந்தன. அவரை எதிர்த்து பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து சுயேட்சையாக களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்றார். இதன் […]

#BJP 3 Min Read
O Panneerselvam

10-ம் வகுப்பு படிச்சாலே போதும் …! சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றலாம் ..!

இராமநாதபுரம் : சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வேளைக்கு வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, இராமேஸ்வரம், கடலாடி ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்களாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. இந்த வேலையில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எவ்வளவு சம்பளம் எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதனை […]

#Ramanathapuram 7 Min Read
Legal Volunteer Job

ராமநாதபுரத்தில் 6 ஓபிஎஸ்-களின் நிலை என்ன?

மக்களவை தேர்தல் :  2024-ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி உடன் சுயேட்சையாக  போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  9,8208 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். முதல் இடத்தில், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பாக போட்டியிட்ட நவாஸ்கனி கே  1,66,127 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும், இதே ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தவிர்த்து அதே பெயரில் இன்னுமே 5 பேர் போட்டியிட்டுள்ளார்கள்.  சுயேட்சையாக  […]

#BJP 3 Min Read
Default Image

ராமநாதபுரம் தேர்தல் களத்தில் சுவாரஸ்யம்.. பன்னீர்செல்வம் பெயரில் 6 பேர் போட்டி!

OPS: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 6-வதாக மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுர தொகுதியில் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது. அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் […]

#OPS 4 Min Read
opanneerselvam

தேர்தல் விதிமுறை மீறிய ஓ.பி.எஸ்.? 500 ரூபாயால் வந்த சிக்கல்.!

OPS : ராமநாதபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது ஒரு நபருக்கு சுயேச்சை வேட்பாளர் ஓபிஎஸ் 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக  கூட்டணி ஆதரவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். முன்னதாக இரட்டை இலை சின்னம் கேட்டு, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வந்த ஓபிஎஸ், நேற்று தனக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்து […]

#BJP 4 Min Read
O Panneerselvam

ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் போட்டி – ஐயூஎம்எல் அறிவிப்பு

Navas kani : ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் வரும் மக்களவை தேர்தலில் போட்டி என ஐயூஎம்எல் கட்சி அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஒரு சில கட்சிகளுடன் உடன்பாடு எட்டியுள்ளது. திமுகவில் மதிமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மமக, கொங்கு நாடு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் […]

#Ramanathapuram 6 Min Read
navas kani

ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக்கு தர வேண்டாம்.. திமுக நிர்வாகிகள் வலியுறுத்தல்.!

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் வேளையில், திமுகவும் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது. திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த குழுவானது தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில் சிஏஏவை காலூன்ற விடமாட்டோம் – முதல்வர் ஸ்டாலின் இந்த நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை குழுவில், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இந்த ஆலோசனை […]

#Ramanathapuram 4 Min Read
DMK Leader Tamilnadu cm MK Stalin

சிவகங்கை அருகே கோர விபத்து : 3 பேர் பலி..6 பேர் படுகாயம்!

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உட்பட 12 பேர் பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு டாடா ஏஸ் வேனில் சென்றார்கள். அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பு கொண்டு இருந்த சமயத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தளக்கா வயல் என்னும் இடத்தில் இன்று அதிகாலை அருகே […]

#Ramanathapuram 4 Min Read
Devakottai Accident

மேலும் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பின்னர் ரெட் அலர்ட் காரணமாக  தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்,  மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு […]

#Kanyakumari 2 Min Read