ராஜீவ்காந்தி வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை … Read more

ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளி யார் என தெரியாது.! கணவரை சந்தித்த பின் நளினி பேட்டி.!

ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். – நளினி தகவல்.  முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் சிறையில் இருந்து அண்மையில் வெளியான நளினி, திருச்சி முகாமில் இருக்கும் தனது கணவர் முருகனை இன்று சந்தித்து விட்டு வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘ ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். … Read more

என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி.! – விடுதலையான நளினி மகிழ்ச்சி.!

இத்தனை வருடங்கள் என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி என விடுதலையான நளினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் மகளிர் தனிசிறையில் இருந்த நளினி இன்று விடுதலையானார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இஇதனை வருடம் என்னை மறக்காமல் இருந்த தமிழ் … Read more

#Breaking: வேலூர் சிறையில் இருந்து நளினி விடுதலை!

வேலூர் பெண்கள் தனிசிறையில் இருந்து விடுதலையானார் நளினி. பரோலை ரத்து செய்யக்கோரி வேலூர் மத்திய சிறை நிர்வாகத்திடம் நளினி கடிதம் அளித்த நிலையில், தற்போது விடுதலையானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறை நிர்வாகத்திடம் கடிதம் அளித்தார் நளினி. கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு பின் தனிசிறையில் இருந்து விடுதலையானார் நளினி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், … Read more

தன் மீது மத்திய சட்டத்தின் கீழ் வழக்குகள் இல்லை.! இந்த விடுதலை மகிழ்ச்சி தருகிறது.! நளினி பேட்டி.!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரையும் விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நளினி மகிழ்ச்சி.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, தங்களையும் பேரறிவாளனை போலவே விடுதலை செய்ய வேண்டும் என நளினி, ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில், அவர்களையும் இன்று விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை … Read more

ஆளுநர் அராஜகப் போக்கிற்கு கிடைத்த சரியான பதிலடி – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையால் ஓரளவுக்கு ஆறுதல் என வைகோ கருத்து. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலையில் எந்த தொடர்பும் இல்லாதவர்களின் 30 ஆண்டு கால வாழ்க்கை மரண இருளிலே அழிந்தது. இந்த … Read more

#BREAKING: இந்த தீர்ப்பு ஒரு ஆதாரம்! 6 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் அறிக்கை!

மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது திமுக அரசுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு தமிழக … Read more

#BREAKING: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். நளினி, ராமச்சந்திரன் மனுக்களை விசாரித்த பிஆர் காவாய் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு … Read more

#BREAKING: பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு – உச்சநீதிமன்றம் அதிரடி

அதிகாரம் குறித்த விஷயங்களுக்கு போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விசாரணை அமைப்பும், மத்திய அரசும் சரியான விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இதனடிப்படையில் தான் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது பேரறிவாளன் பிணையில் இருக்கிறார். இன்று மீண்டும் வழக்கு … Read more

பேரறிவாளனுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க இதுதான் காரணமா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு தமிழரின் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பி வந்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். தற்போது உடல்நலக்குறைவால் பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு டெல்லி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பேரறிவாளன் பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமீன் … Read more