நிறைவேறாத கனவு… ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி சாந்தன் சென்னையில் காலமானார்.!

Rajiv gandhi Murder Case - Chandhan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.  இவர் இளைஞர் தமிழர் என்பதால் திருச்சியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். Read More – தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது- பிரதமர் மோடி ..! ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன், கடந்த ஜனவரி மாதம் … Read more

மறுசீராய்வு மனுவினால் உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற வாய்ப்பில்லை.! திருமாவளவன் கருத்து.!

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த சீராய்வு மனுவால் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறு என தீர்ப்பு  வந்த்துவிடாது. – திருமாவளவன் பேச்சு. ராஜீவ் காந்தி கொலை குற்றத்தில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையானதை அடுத்து நளினி, முருகன், சாந்தன் உட்பட 6 பேரும் அண்மையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மறுசீராய்வு மனு குறித்து விசிக தலைவர் … Read more

#Breaking:நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் – தமிழக அரசு முடிவு!

சென்னை:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. வயது மூப்பின் காரணமாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கடைசி காலத்திலாவது மகளுடன் இருக்க வேண்டும் … Read more

நாளை பரோலில் வெளிவருகிறார் ரவிச்சந்திரன் – சிறைத்துறை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளிவருகிறார் என்று சிறைத்துறை அறிவிப்பு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என முதல்வரிடம் ரவிச்சந்திரன் தாய் தரப்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோலில் வெளியே செல்ல தமிழக சிறைத்துறை உத்தரவை … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ரூ.5 ஆயிரம் கொரோனா நிதி..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில்,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் உள்ள நளினி முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரம் நிதியாக வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக,கஜா புயலின் … Read more

7 பேர் விடுதலை எப்போது..? – ஆளுநர் தரப்பு விளக்கம்.!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை பெற்று வரும் நிலையில், சமீபத்தில், பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என தாய் அற்புதம்மாள்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் புழல் சிறையில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பேரறிவாளனுக்கும் கொரோனா தாக்கிவிடுமோ என்ற எண்ணத்தில் … Read more

ரவிச்சந்திரனுக்கு பரோல், 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி,பேரறிவாளன் ,சாந்தன்,ரவிச்சந்திரன்,முருகன்,ராபர்ட் பயாஸ் ,ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் சார்பில் பரோல் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனுவை … Read more

“பிரதமரை கொல்ல குண்டு தயாரித்தவர்” இலங்கை கட்டுப்பாட்டில் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி..!!

ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானம் தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறும் போது , இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்காக … Read more

7 பேர் விடுதலையில் சிக்கல்..? ஆளுநர் மாளிகை கருத்து..!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பரிந்துரை செய்தது. தமிழக அரசின் பரிந்துரை குறித்து உள்துறையின் கருத்தினை ஆளுநர் மாளிகை கேட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளது ஆளுநர் மாளிகை. 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான … Read more

ஏழு பேர் விடுதலை இல்லை..!புயலை கிளப்பிய சு.சாமி கருத்து..!!!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்இந்த நிலையில் இன்று கூடிய அமைச்சரவையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இன்று கூடிய அமைச்சரவையில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்வார் என்றும், விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர்கள் கூறினார்கள்,இந்த நிலையில் பா.ஜ.க … Read more