புதுக்கோட்டை அருகே இடி தாக்கி 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே  இடி தாக்கியதில்  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள்  தொடங்கவுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.இதனையொட்டி இன்று  புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்டோர் மீது இடி  தாக்கியது.இதில் 4 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர். இதில்  காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.