தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கடந்த 48 மணிநேரத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் இரண்டு குழந்தைகள், உணவளிக்கும் போது மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், மூன்றாம் குழந்தை கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த மூன்றாம் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் முடிவுக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.