டெல்லியில் அக்டோபர் 1 முதல் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொது போக்குவரத்தை பயன்படுத்த அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும், வாகனங்களை பயன்படுத்துவோர் PUC எனும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை பெற வேண்டும். தங்கள் வண்டியில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு ஆகிய […]
கேரளாவில் மின்சார ஸ்கூட்டர்க்கு மாசுக்கட்டுப்பாட்டு(PUC) சான்றிதழ் இல்லாததால் அபராதம்-வைரலாகும் புகைப்படங்கள். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலஞ்சேரியில் செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) இல்லாததால் மின்சார ஸ்கூட்டர் உரிமையாளருக்கு கேரள போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்ததுள்ளது. அந்த வாகனம் மற்றும் போலீசார் வெளியிட்ட இ-சலான் இரண்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளப் பயனாளிகள், மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், இந்தப் பிரச்னையைக் கவனிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.