தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட 2.5 டன் பவளப்பாறைகள் பறிமுதல் ..!

தூத்துக்குடி அருகே சக்கம்மாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் அலங்கார மீன் பண்ணையில் தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் வனசரகர் விமல்குமார் ,  மன்னார்வளைகுடா வனத்துறை வனசரகர் ரகுவரன் ஆகியோர் அந்த அலங்கார மீன் பண்ணை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2.5 டன் எடை கொண்ட பவளப்பாறைகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிவத்தையாபுரத்தை சேர்ந்த பாஸ்கர் மற்றும் செந்தியம்பலத்தை சேர்ந்த ரூபன் அல்போன்ஸ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.