பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்காட்டில் உள்ள ‘பிரைம்’ சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 19 மாணவர்கள் நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை தொடங்கும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுக்கு அந்த தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை. நாளை தேர்வு தொடங்கும் நிலையில், ஹால்டிக்கெட் வராததால் பரிதவிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சம்மந்தப்பட்ட பள்ளிக்கு 8ஆம் வகுப்பு வரை கூட அங்கீகாரம் […]