சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் கடந்த ஜன 14-ம் தேதி முதல் ஜன 19-ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வாசிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவரவர் இல்லத்திற்கு போட்டிப்போட்டு கொண்டு […]
சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை, பரனூர், பெருங்களத்தூர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில், பெருங்களத்தூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், நேற்று காணும் பொங்கல் என்பதால், அதையொட்டி பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதால் சென்னை தாம்பரத்தில் கடும் போக்குவரத்து […]