சேலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக போட்டி போட்டுக் கொண்டு விஷம் குடித்த மாமியார் பலியானார். மருமகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சரஸ்வதி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக சரஸ்வதிக்கும் அவரது மாமியார் சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. […]