டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.
பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். சமூக வலைத்தளமான ட்விட்டர், பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் உள்ளிட்டவற்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்.ட்விட்டரில் 53.3 மில்லியன் பின் தொடருகிறார்கள்,பேஸ்புக் 44 மில்லியன் பின் தொடருகிறார்கள்,இன்ஸ்டாகிராம் 35.2 மில்லியன் பின் தொடருகிறார்கள் ,யூடியுப்பில் 4.5 மில்லியன் பின் தொடருகிறார்கள். This Sunday, thinking of giving up my social media accounts on Facebook, Twitter, Instagram & […]
கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் அகதிகளாக உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் சி.ஏ.ஏவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் அகதிகளாக வந்தவர்களிடம் பொய்யான தகவல்களை கூறி வன்முறையை தூண்டி விடுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் லட்சக்கணக்கான அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பதற்காகவே பிரதமர் மோடி தலைமையிலான அரசு சி.ஏ.ஏ.வை கொண்டு வந்ததாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது சேவை, விளையாட்டு உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பின்னர் பாஜகவின் 6 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 9 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட முகாம் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற முகாம்களை எளிதில் காண முடியாது என்றும் […]
அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அகமதாபாத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள (மோட்டேரா) சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க ட்ரம்ப் மற்றும் மோடி மைதானத்துக்கு வந்தடைந்தனர். இதையடுத்து இருநாட்டு தேசிய கீதம் போடப்பட்டது. பின்னர் நமஸ்தே டிரம்ப் என்ற தலைப்பில் பிரதமர் மோடி வரவேற்பு உரையை அளித்தார். அதில் […]
சற்று நேரத்திற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , அவருடைய மனைவி மெலனியா இருவரும் அஹமதாபாத் நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடி அகமதாபாத் விமானநிலையத்தில் அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார். இந்தியாவிற்கு முதல் முறையாக 2 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று , நாளை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நேற்று இரவு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் […]
இன்னும் சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திக்கவுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் பலர் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார்கள்.அகமதாபாத் விமான நிலையத்திற்கு வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். हम भारत आने के […]
62வது மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் ஔவையின் வரிகளை சுட்டிக் காட்டி, அதற்கான விளக்கத்தையும் அளித்த பிரதமர் மோடி. 62வது மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில், ராக்கெட் ஏவுவதை காணும் வகையில், 10,000 பேர் அமரும் வகையிலான கேலரி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இளைஞர்கள், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த உதவும் எனவும் பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த மாதம் […]
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன் தயாள் உபாத்யாயாவின் 63 அடி உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடியை, உத்தரபிரதேச ஆளுநர் அனந்தீபென் பாட்டில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.முதலாவதாக ஜங்கம்வாடி மடத்தில் வழிபாடு செய்த பிரதமர், தொடர்ந்து ஸ்ரீ ஜகத்குரு விஷ்வராதயா குருகுலத்தில் நடைபெற்று வரும் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். […]
பிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இன்று(sunday) ரூ.1200 கோடி மதிப்புடைய 50 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இன்று(sunday) ரூ.1200 கோடி மதிப்புடைய 50 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் நாட்டின் முதல் தனியார் ரயில் வாரணாசியை, மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க புனிதத்தலங்களுடன் இணைக்க உள்ளது. மேலும் 430 படுக்கைகள் கொண்ட உயர்தர வசதிகளுடன் அரசு மருத்துவமனையும், 74 படுக்கைகளைக் […]
மோடி பிரதமர் போல் நடந்து கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டிருந்தார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறுக்கிட்டார். அப்பொழுது பிரதமர் மோடி பேசுகையில் , நான் 30 நிமிடங்களாக பேசி வருகிறேன். இப்போது தான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும் […]
அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதித்து உள்ளதால் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலில் தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.இதன் […]
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். நான் கூறியது போல குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக 5 விமர்சகர்ளுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள […]
பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்சாவையும் ஒருமையில் பேசியதாக நெல்லை கண்ணன் மீது பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர். நெல்லை கண்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்சாவையும் ஒருமையில் பேசியதாக அவர் மீது பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், […]
முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார். முப்படைகளுக்கும் ஒரே தளபதி என்பது ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. […]
அண்மையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்தது. யாருடைய குடியுரிமையையும் குடியுரிமை சட்டம் பறிக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் […]
ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 30 -ஆம் தேதி தொடங்கி, இந்தமாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி சார்பாக ஜார்கண்ட் முக்தி […]
உள் நாட்டில் தாயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய இளைஞர்கள் ஒழுங்கான அமைப்பு முறையை விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில் ,உள் நாட்டில் தாயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.பொங்கல் பண்டிகையின் இறுதி நாள் திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுவதில் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் . இன்றைய இளைஞர்கள் ஒழுங்கான அமைப்பு […]
மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்து அதற்கான விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க […]
மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியாக நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியாக நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிக்காக ரூ.8,500 […]