தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பதிவு செய்திருந்த அனைத்துத் தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று திமுக முன்னாள் எம் எல் ஏ தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கி நடைபெற வேண்டிய 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள், ‘கொரோனா’ நோய்த் தொற்றின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் கழகத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி அவர்களது தொடர் அழுத்தத்தாலும், கழகத்தின் இளைஞரணி […]