கழிவறைக்கு செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்பவர்களா நீங்கள்…? இதை படியுங்கள்!

Toilet

செல்போன்- முன்பெல்லாம் கழிவறைக்குச் செல்லும் பொழுது கையில் தொலைபேசியுடன் சென்றாலே அனைவரும் கேள்வி எழுப்பக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், தற்பொழுது வீடுகளுக்குள்ளேயே தனி கழிவறைகள் இருப்பதால் ஆண்கள் பெண்கள் இருவருமே கழிவறைக்குச் செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அண்மைய கணக்கெடுப்பின்படி 90% பேர் கழிவறை செல்லும் பொழுது தொலைபேசியை கையில் எடுத்துச் செல்லும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு கழிவறைக்கு தொலைபேசி எடுத்து செல்வதால் ஏற்படக்கூடிய தீமைகள் … Read more

10 மாதங்களுக்கு பின் ஆற்றில் தொலைத்த ஐபோன் கண்டெடுப்பு…! எந்த கோளாறும் இன்றி இயங்கிய போன்..!

இங்கிலாந்தில், 10 மாதங்களுக்கு முன் தொலைந்த ஐபோன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எந்த கோளாறும் இன்றி இயங்கியுள்ளது.  இங்கிலாந்தை சேர்ந்த ஓவைன் டேவிஸ் தனது ஐபோனை ஆகஸ்ட் 2021 இல் இளங்கலை விருந்தின் போது சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதியில் தொலைத்தார். போனை தேடியும் கிடைக்காததால், அப்படியே விட்டுவிட்டார். இந்த நிலையில், போன் தொலைந்து 10 மாதங்களுக்கு பின், மிகுவல் பச்சேகோ என்பவர் படகில் பயணம் செய்யும் போது, டேவிஸின் ஐபோனைக் ஆற்றில் கண்டெடுத்தார். அந்த போனை … Read more

தண்டவாளத்தில் படுத்துக்கிடந்த போன் பேசிய பெண்ணை கடந்து சென்ற ரயில் – வீடியோ உள்ளே..!

ரயில் ஒன்று மிக வேகமாக தண்டவாளத்தை கடந்து செல்லும் பொழுது பெண் ஒருவர் தொலைபேசியில் பேசியவாறு தண்டவாளத்தில் படுத்து கிடக்கிறார். ரயில் கடந்து சென்றதும் அப்பெண் சாதாரணமாக எதுவும் நடக்காதது போல தொலைபேசியில் பேசியவாறே அந்த இடத்தை கடந்து செல்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபென்சு கப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளளர். இதோ அந்த வீடியோ, फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी … Read more

இன்று முதல் இந்த மாடல் போன் வைத்திருப்பவர்களுக்கு வாட்ஸ் அப் இயங்காது…!

ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் வெர்ஷன் மாடல்கள் கொண்ட போன் பயன்படுத்துபவர்களுக்கு இன்று முதல் வாட்ஸ் அப் இயங்காது. இந்த 2021 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வாட்ஸப் நிறுவனம் முன்னமே தெரிவித்தது போல இந்த ஆண்டின் முடிவில் வாட்ஸப்பில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. ஒரு சில ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸப் இனி வேலை செய்யாது எனும் அறிவிப்பை அண்மையில் வாட்ஸப் நிறுவனம் வெளியிட்டது. … Read more

சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம் – இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..!

இங்கிலாந்து விஞ்ஞானிகள் சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின்,பிரிஸ்டலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மனித கழிவுகளை(யூரினை) மின்சாரமாக மாற்றும் புதிய சுத்தமான ஆற்றல் எரிபொருள் கலத்தை (battery) உருவாக்கியுள்ளது.இதன்மூலம்,செல்போன் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம்.மேலும் அதை ஒருநாள் முழு வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு பயன்படுத்த விரும்புகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிளாஸ்டன்பரி திருவிழாவில் ‘பீ பவர்’ திட்டம் முதன்முதலில் பகிரங்கமாக சோதனை செய்யப்பட்டது, அங்கு விஞ்ஞானிகள் கழிப்பறைகள் நிலையான மின்சாரத்தை உருவாக்க முடியும் … Read more

ஆண் நண்பருடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிய தங்கை…, அடித்து கொன்ற அண்ணன்!

16 வயது சிறுமி நீண்ட நேரம் தொலைபேசியில் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்ததால், அவரது அண்ணன் அச்சிறுமியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கணபதி நகரை சேர்ந்த முருகேசன் எனும் கூலித் தொழிலாளியான நபருக்கு, சங்கிலியம்மாள் எனும் மனைவியும், கார்த்திக் என்ற மகனும், 2 மகள்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக முருகேசன் உயிரிழந்த நிலையில் அவரது மகன் கார்த்தி கட்டிட வேலைக்கு சென்று தனது … Read more

இறந்த கொரோனா நோயாளிடமிருந்து போனை திருடிய செவிலியர்..!

உத்தரகண்ட்டில் கொரோனா நோயாளியின் தொலைபேசியை  செவிலியர் திருடியதாகக் கூறப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ருகையா என்ற செவிலியர் ஒருவர் கொரோனா நோயாளியிடம் இருந்தது அவரது தொலைபேசியை அவர் இறந்த பிறகு திருடினார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இறந்த நபரின் மகனான அமன்தீப் கில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மே 8-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய தொலைபேசி திருடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அமன்தீப் … Read more

ஆட்டோவில் இருந்த பெண்ணிடமிருந்து போனை பறித்த திருடர்கள் – கீழே விழுந்து உயிரிழந்த பெண்!

பஞ்சாபில் ஆட்டோக்குள் அமர்ந்திருந்த பெண்ணிடமிருந்து போனை திருடர்கள் பறிக்க முயன்ற போது அதை மீண்டும் பிடுங்க நினைத்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். தற்போதைய காலத்தில் தெருவில் பெண்கள் அல்ல ஆண்களே நடந்து செல்வதற்கு சற்று அச்சமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால் வழிப்பறி கொள்ளை தான். தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருக்க கூடிய பொருட்கள், கைப்பை அல்லது அணிந்திருக்கக் கூடிய தங்க நகைகள் ஆகியவற்றை திருடிவிட்டு செல்லும் கொள்ளையர்கள் பல்வேறு … Read more

செல்போன் கொடுக்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 6-ம் வகுப்பு மாணவன்…! தூத்துக்குடியில் பரபரப்பு…!

தயார் செல்போன் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட 6-ம் வகுப்பு பயிலும் சிறுவன்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, மார்த்தாண்டம் பட்டியை சேர்ந்த சீனிமுருகன் – ஜோதிமணி  தம்பதியினரின் இரண்டாவது மகன் பாலகுரு. இவர்களது மூத்த மகன் மதன் மற்றும் பாலகுரு இருவரும் பெற்றோரின் செல்போனில் விளையாட ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.  இந்நிலையில், சீனிமுருகன் வேலைக்கு சென்றுள்ளார். ஜோதிமணி திருமண விழாவுக்காக வெளியூர் சென்றுள்ளார். பின் வீடு திரும்பிய ஜோதிமணி, அவரது இரண்டாவது மகன் பாலகுரு தூக்கில் … Read more

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த ஏமாற்றம்!

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி. இன்று நம்மில் அதிகமானோர், ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த வகையில், மும்பையை சேர்ந்த அமோல் பகத் (42) என்பவர் ஆன்லைனில், 9,500 மதிப்புள்ள செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, கொரியர் நிறுவனம் செல்போனை டெலிவரி செய்ததையடுத்து, ஆவலோடு திறந்து பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் டெலிவரி செய்த பாக்சில் செல்போனுக்கு பதிலாக, சோப்புக்கட்டி இருந்துள்ளது. இதனையடுத்து, … Read more