கேரள மாணவி பிரதமர் மோடிக்கு அனுப்பிய பரிசு: என்ன தெரியுமா?

டெல்லி சென்ற பாஜக எம்.பி சுரேஷ் கோபி கேரள மாணவி அளித்த பரிசை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள குளநாடா கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி. இந்த மாணவி நாடு முழுவதும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த மாணவி அவரது கிராமத்தில் வளர்த்த கொய்யா செடியை, பிரதமர் மோடிக்கு பரிசாக டெல்லி சென்ற பாஜக எம்பி சுரேஷ் என்பவரிடம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இது … Read more

தொடர் கனமழை எதிரொலி : பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை.!

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா அணையின் நீர்மட்டம் தற்போது 983.05 மீட்டராக உயர்ந்துள்ளதை அடுத்து, அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரள மாநிலத்தில் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா அணை கனமழையின் காரணமாக நிரம்பி வழிகிறது. பம்பா அணையின் நீர்மட்டம் தற்போது 983.05 மீட்டராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையமானது, பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு … Read more

இன்று திட்டமிட்டப்படி பத்தனம்திட்டா மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ..!

இத்தாலியில் இருந்து கேரளாமாநிலத்தில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்திற்கு திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேருக்கும் அவர்களின் உறவினர் 2 பேர் என 5 பேருக்கு நேற்று முன்தினம்  கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் வெளி நாடுகளிலிருந்து வரும் அனைவரும் பொறுப்பை உணர்ந்து கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேரளா மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கேட்டுக்கொண்டார். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை … Read more

கொரோனா எதிரொலி.. பத்தினம் திட்டா மாவட்டத்திற்கு 3 நாட்களுக்கு விடுமுறை..

இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேருக்கும் அவர்களின் உறவினர் 2 பேர் என 5 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என கேரளா மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கூறினார். கொரோனாவால்  பாதிக்கப்பட்ட 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் வெளி நாடுகளிலிருந்து வரும் அனைவரும் பொறுப்பை உணர்ந்து கண்டிப்பாக  மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் … Read more

#BREAKING : கேரளாவில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி ! இந்தியாவில் மொத்தம் 39 பேருக்கு பாதிப்பு

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த  டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உகானில் சீனா முழுவதும் பரவியது.மேலும்  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,கேரளாவில் ஒரே … Read more

கேரளாவில் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய வாலிபர்!!!

தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி மறுபடியும் வலியுறுத்தி இருக்கிறார். அதற்கு கவிதா மறுக்கவும் , அஜின் ரேஜி மேத்யூ கொண்டு வந்த இரண்டு பாட்டில் பெட்ரோலை கவிதா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அஜின் மேத்யூ மீது 302-பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லா பகுதியை சேர்ந்த கவிதாவை அஜின் ரேஜி மேத்யூ என்பவர்  காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவிதாவை வலியுறுத்தியுள்ளார். … Read more