எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை துவங்கியதும், காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியையும் பொருட்படுத்தாமல் பாஜக உறுப்பினர்கள் உரையாற்றினர். இதனிடையே எதிர்கட்சிகள் தொடர் அமளியால் பகல் 12 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதிகள் சம்பள உயர்வுக்கான மசோதா பார்லிமென்ட், லோக்சபாவில் நிறைவேறியது. இந்த சம்பள உயர்வின்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய சம்பளம் ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2.80 லட்சமாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய சம்பளம் ரூ.90,000 த்திலிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. எனினும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதால் மசோதா நிறைவேறாமல் போகும் பட்சத்தில் ஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என […]