சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை ஆய்வுக்கூட முடிவுகளும் உறுதிப்படுத்தி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யானது திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்தும் பெறப்பட்டதாக திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் தரம் குறைவான நெய் அனுப்பியதாகவும், அதனால் அந்நிறுவனம் மீது சட்டப்படி […]