பாகிஸ்தானில் உள்ள ரயில்வே மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பகுதியில் உள்ள ரயில்வேயில் மந்திரியாக பணிபுரிபவர் தான் ஷேக் ராஷித் அகமது இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு, அவர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் நவாஸ் ஷெரீப் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷாகித் காகன் அப்பாசிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. […]