மனைவியை இழந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன்.!தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த மு.க. ஸ்டாலின்.!

அமைச்சர் ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி மரணமடைந்ததை அடுத்து மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கலைச்செல்விக்கு நேற்று திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனையடுத்து அவரது உடல் … Read more

'சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" – ஓ.எஸ்.மணியன்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள் சமீபத்தில் ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெறிவித்து வந்தனர். இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.”சீமான் அவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிற மனிதர். பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அரசியல் அலப்பறைகள்:சோனியா வர வேண்டும்! தேர்தல் பிரச்சாரத்தில் வாய் உளறிய அமைச்சர்

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டின் வலுவான பிரதமராக மோடி வரவேண்டும் என சொல்வதற்கு பதிலாக, வாய் தவறி சோனியா வர வேண்டும் என சொல்ல முயன்றார் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் .  வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். … Read more

தினகரனை மட்டும் ஒருபோதும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள முடியாது- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மதம் என்பது தனிப்பட்ட ஒருவரின் உணர்வு சார்ந்த விஷயம் என்றும், அதில் எந்த ஒரு குறையும் கூறக்கூடாது என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உணர்வுப்பூர்வமான விஷயங்களில் மத்திய அரசு அவசரம் காட்டுவதாக கூறினார். மதம் என்பது தனிப்பட்ட ஒருவரின் உணர்வு சார்ந்த விஷயம் என்றும், அதில் எந்த ஒரு குறையும் கூறக்கூடாது என தெரிவித்தார். அதிமுக கட்சியில் யார் வேண்டுமானாலும் … Read more

“சொந்தத்தில் திருமணம் வேண்டாம்” தமிழக அமைச்சரின் பேச்சு..!!

சொந்த உறவுமுறையில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். நாகையில், மத்திய அரசின் ராஷ்டிரிய  யோஜனா திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய ஓ.எஸ்.மணியன், குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு முக்கிய காரணம் சொந்த உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதுதான் என்றும், இது  அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், சொந்தத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் … Read more