ஆளுநர் கையெழுத்து பின்னணி…. ஆன்லைன் சூதாட்டம் தங்க முட்டையிடும் வாத்து.! ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து.!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு கோடிக்கணக்கில் வரியை பெற்று வருகிறது. தங்க முட்டையிடும் வாத்தை யார் தான் அறுப்பார்கள். – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த தமிழக சட்டப்பேரவை மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் இருக்கிறார். அதற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறுகையில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு கோடிக்கணக்கில் வரியை பெற்று வருகிறது. … Read more

உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே நிலைக்கும்- நடிகர் விஷால் காட்டம்.!

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர். இதனால், பலர் தங்களது பணத்தை இதில் செலவிடுவதால், பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். அப்படி இருந்தும் ஒரு சில சினிமா பிரபலங்கள் இந்த ரம்மி விளையாட்டை விளம்பர படுத்தும் விளம்பரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் சிலர் அதில் நடிக்க எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் மக்களின் நலன் கருதி அதில் நடிக்க மறுத்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் விஷாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஆன்லைன் ரம்மி … Read more

ஆன்லைன் விளையாடு தடை மசோதா.! ஆளுநருக்கு தமிழக அரசு பதில் கடிதம்.!

ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா குறித்து விளக்கம் கேட்ட ஆளுநர் ரவிக்கு தமிழக அரசு பதில் விளக்க கடிதம் அனுப்பியுள்ளனர்.  கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்ட சபையில் நிறைவேற்றபட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க 6 வார கால அவகாசம் உண்டு அது இம்மாதம் 27ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதனை அடுத்து நேற்று ஆளுநர் ரவி ஆன்லைன் தடை சட்ட … Read more

#Breaking : ஆன்லைன் விளையாட்டு தடை.! அவசர சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. ஆன்லைன் விளையாட்டு காரணமாக பலர் அதிக பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வதால் கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. அதன் பிறகு சட்டசபையில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு,  ஆளுநர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு பிறப்பித்த ஆன்லைன் அவசர சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

#Breaking : ஆன்லைன் ரம்மி தடை.! அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.!

தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.  ஆன்லைன் விளையாட்டு குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாடி அதற்கு அடிமையாகி பலர் தங்கள் பெருமளவு பணத்தை இழந்து, கடனாளியாக மாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்காக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் அந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வெளியாகிவிட்டது. இதனை தொடர்ந்து … Read more

ஆன்லைன் ரம்மி மோகம்.. அதீத கடன்.. தற்கொலை செய்துகொண்ட தமிழக இளைஞர்.!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்சம் வரையில் பணம் இழந்ததால், ராசிபுரத்தை சேர்ந்த சுரேஷ் எனும் இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.   ஆன்லைன் தமிழ் விளையாடி அதிக பணம் ஈட்ட முடியும் என ஓர் கற்பனை உலகத்தில் பலரும் ஏமாந்து தங்கள் பணத்தை இழந்து அதிக கடனையும் சிலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர் இது தொடர் கதையாக நின்று கொண்டே போகிறது தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு இடம் யார் தற்கொலை செய்து கொண்டு உள்ளார் இவர் … Read more

நடிகர்களை நம்பி விளையாடாதீர்கள்., அது ஆன்லைன் மோசடி.! டிஜிபி எச்சரிக்கை.!

நடிகர்கள் விளம்பரத்தில் வருகிறார்கள் என்பதற்காக ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.  ஆன்லைன் விளையாட்டு மோகம் தற்காலத்து இளைஞர்கள் மத்தியில் கொஞ்சம் அதிகமாகவே பரவி வருகிறது. குறைவான முதலீடு அதிகளவு லாபம் என கண்ணை பறிக்கும் விளம்பரங்கள் படித்த இளைஞர்களையும் கவர்ந்து விடுகின்றன. அதனை நம்பி ஏமாந்து பலர் தங்கள் பெரும்பகுதி பணத்தை இழந்துள்ளனர். சிலர் இதனால் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரையும் மாய்ந்துள்ள சம்பவங்களையும் நாம் அவ்வப்போது செய்திகள் மூலம் … Read more

“முதலமைச்சரின் இந்த உத்தரவாதம் வரவேற்கத்தக்கது”- பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு, திருத்தப்பட்ட தடை சட்டம் தான் தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கும் உத்தரவாதம் வரவேற்கத்தக்கது என்றும்,ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு,திருத்தப்பட்ட தடை சட்டம் தான் தீர்வு என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் … Read more

“மிகுந்த வேதனை…விடியா அரசே,இதனை தடை செய்” – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

திமுக அரசு,ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பெருங்குடியில் வசிக்கும் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவருக்கு,தாரா என்ற மனைவியும்,இரண்டு மகன்களும் இருந்தனர். இந்த நிலையில்,தனது மனைவி மற்றும் மகன்களை கொலை செய்து விட்டு மணிகண்டன் தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட … Read more

ஆன்லைன் ரம்மி – தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டிற்குத் தடை விதித்து அப்போதைய அதிமுக அதிமுக அரசு சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அதிமுக அரசின் சட்டத்திற்கு எதிராக வழக்கு … Read more