பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒரு முதலவர் மட்டுமே OBC பிரிவை சேர்ந்தவர் – ராகுல் காந்தி!

Rahulgandhi Congresss Ex MP

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முடிந்த பின், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் அறிவித்தார். பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதையடுத்து, நாடு முழுவதும் அதற்கான சூழலை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இப்பொது, ஜாதிவாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என ராகுல் … Read more

37,000 பெண்களுக்கு தலா ரூ.20,000 திருமண உதவித்தொகை – உ.பி அமைச்சர் அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தில் 37,000 ஓபிசி பெண்களுக்கு திருமண உதவி தொகையை அறிவித்தார் அம்மாநில அமைச்சர். உத்தரப் பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைச் சேர்ந்த 37,500 பெண்களுக்கு, அவர்களின் திருமணத்தின் போது தலா ரூ.20,000 திருமண உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நரேந்திர காஷ்யப் அறிவித்துள்ளார். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்தத் தொகை திருமணத்திற்கு 90 … Read more

10 சதவீத இடஒதுக்கீடு.! காங்கிரஸை தொடர்ந்து திமுக சார்பிலும் சீராய்வு மனு தாக்கல்.!

OBC பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு அளித்துள்ளது.   கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் OBC பிரிவில் பொருளாதாரத்தில்  பின்தங்கியவர்களுக்கு எஸ்.சி/ எஸ்.டி , MBC, BC வகுப்பினருக்கு அளிக்கும் இடஒதுக்கீடு போல 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உச்சநீதிஅம்மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு; கொள்கை முடிவை மக்களுக்காக மாற்றி அமைக்கலாமே – உயர்நீதிமன்றம்

மக்களின் நலனுக்காக கொள்கை முடிவை மாற்றி அமைக்க பரிசீலனை செய்யலாமே என உயர் நீதிமன்ற மதுரையை கிளை. மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவு போல ஓபிசி அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்தக்கோரி உயர் நீதிமன்ற மதுரையை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஓபிசி பிரிவின் அடிப்படையில் கணக்கெடுப்பை நடத்த கூடாது என்பது மத்திய அரசின் கொள்கை ரிதியான முடிவு என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 1951-ல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் கொள்கை … Read more

“எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை; பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும்” – எம்பி ரவிக்குமார் கோரிக்கை..!

எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார்  கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்வேறு விதமான படிப்பு உதவித் தொகைகள் மத்திய அரசின் பங்களிப்போடும், தமிழ்நாடு அரசாலும் வழங்கப்படுகின்றன. 8 லட்ச ரூபாய் ஆண்டு … Read more

ஓபிசி பிரிவினர்: மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓபிசி பிரிவினரை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல். இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பிரிவினர் பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்டத் திருத்த மசோதா டெல்லி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஓபிசி பிரிவினரை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்கு … Read more

மத்திய அரசுக்கும்‌, மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – தேமுதிக தலைவர், விஜயகாந்த்

மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட். எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு 27 சதவீதமும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. நீண்ட சட்ட போராட்டம், அரசியல் … Read more

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு..! பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்ட முடிவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, மருத்துவ படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் … Read more

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி – கமலஹாசன்

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, மருத்துவ படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய … Read more

#Breaking:அகில இந்திய மருத்துவ இடங்கள் – ஓபிசிக்கு இட ஒதுக்கீடு..!

அகில இந்திய மருத்துவ இடங்களில்,ஓபிசி பிரிவினருக்கு  இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில்,இதர பிறப்டுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,மாநில அரசுகள் நடத்தி வரும்  மருத்துவ கல்லூரிகளில் ஆல் இந்தியா கோட்டா என்ற பிரிவில் ஓபிசிக்கு 27 % ,பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. … Read more