வரும் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாளை மறுநாள் சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்  மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். அதன்படி, வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல் … Read more

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இணையமைச்சர் எல்.முருகன்!

மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் முன்னிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் இருந்து மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநிலங்களவை எம்.பி.யாக … Read more

மாநிலங்களவை தேர்தல் – இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் எல்.முருகன்!

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், மத்திய பிரதேச எம்.பி.யாக தேர்வாகிறார் எல்.முருகன். அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை பாஜக தலைமை அறிவித்திருந்தது. அதில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், மத்திய … Read more

#BREAKING: சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் – மாநில தேர்தல் ஆணையம்!

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே தனியாக அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவரை முன்மொழிபவர் மனுதாக்கல் செய்ய அனுமதி … Read more

பவானிப்பூர் இடைத்தேர்தல் – முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார்!

மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார். மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா பானெர்ஜி பவானிப்பூரில் போட்டியிடுகிறார். பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் போட்டியிடுகிறார். மேற்கு வங்கத்தில் பவானிப்பூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய … Read more