நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் பயங்கர தீ.! கன்வேயர் பெல்ட்அறுந்ததால் விபத்து.!

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுரங்கம் 1ஏ பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இயந்திரத்தில் திடீரென தீ பற்றிக்கொண்டது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் பல மணிநேரம் போராடினர். அதன் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

“எனது தலைமையிலான அரசுக்கு இருந்த அக்கறையும்,கரிசனமும் இந்த விடியா திமுக அரசுக்கு இல்லை” – ஈபிஎஸ் வேதனை!

புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வேண்டும் என என்.எல். சி.நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு என்று ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு,ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும்,வீட்டு மனைகளுக்கு,ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும்,நகரப் பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும்,மேலும்,மறு குடியமர்வுக்காக … Read more

என்எல்சி விபத்து.! உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு- என்எல்சி அறிவிப்பு.!

NLC விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு என்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை என என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC 2-ம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும்,  15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். … Read more

#BREAKING: NCL விபத்து.! பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் .!

கடலூர் மாவட்டம் நெய்வேலி NCL 2-ம் அனல் மின்நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும்,  15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. NCL நிர்வாகத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள் அனல் மின் நிலையம் முன் நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர். இந்நிலையில், பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

#BREAKING: நெய்வேலி NLC விபத்து.! உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் அறிவிப்பு.!

நெய்வேலி NLC -ல் உள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் … Read more

#BREAKING: நெய்வேலி NLC விபத்து.! தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது- அமித்ஷா.!

நெய்வேலி NLC -ல் உள்ள  இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த, விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.  இந்நிலையில், நெய்வேலி NLC-யில் ஏற்பட்ட விபத்து மன வேதனையை அளிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். Anguished to learn about the loss of … Read more

NLC அனல்மின் நிலைய தீ விபத்து.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 அக உயர்வு!

NLC அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு. நெய்வேலி NLC அனல் மின் நிலையத்தில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும், … Read more

நெய்வேலி NLC அனல்மின் நிலைய தீ விபத்து! 5 பேர் உயிரிழப்பு!

நெய்வேலி NLC அனல்மின் நிலைய தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. நெய்வேலி NLC அனல் மின் நிலையத்தில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.  15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, இதுவரைக்கும் 17 பேர் என்எல்சி பொது மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் … Read more

#BREAKING: நெய்வேலி என்.எல்.சி யில் பாய்லர் வெடித்து விபத்து.!

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று நெய்வேலி என்.எல்.சி யில் உள்ள 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பகுதியில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன் கடந்த மே மாதம் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள்  ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.