தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் அடுத்து இந்தி படமொன்றுக்கு ஒப்பந்தமாகி உள்ளார். “நடிகைகள் சினிமாவில் அறிமுகமாவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் மார்க்கெட்டை தக்கவைப்பதுதான் சவாலாக இருக்கிறது. எனக்கு தென்னிந்திய மொழிகளில் நல்ல கதைகள் அமைந்தன. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தார்கள். அவர்கள் என்னை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்போலவே கருதி ஆதரவு தந்தார்கள். இது பெரிய மகிழ்ச்சி அளித்தது. திரையுலகில் புதிது புதிதாக நிறைய நடிகைகள் வருகிறார்கள். […]
நடிகை குஷ்பு டுவிட்டரில் உடனுக்குடன் சமூக, அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் அவ்வப்போது அவருக்கு எதிரான விமர்சனங்களும் வருகின்றன. அவற்றை துணிச்சலாக எதிர்கொள்கிறார். தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பதிவிடுகிறவர்களுக்கு பதிலடி கொடுத்து அதிரவும் வைக்கிறார். சில நடிகைகள் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் டுவிட்டரை விட்டே வெளியேறும் சூழ்நிலையில் குஷ்புவின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து பதிவிட்டதற்காக தன்னை கூத்தாடி என்றவருக்கும் பதில் அளித்தார். தற்போது பா.ஜனதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் […]
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் 56 ஏக்கர் பரப்பளவில் மூக்கனேரி என்ற ஏரி உள்ளது. இதன்மூலம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு மூக்கனேரியை பார்வையிட நடிகர் சிம்பு வந்தார். அவர் ஏரியில் பரிசல் சவாரி செய்து சுற்றிப்பார்த்தார். அவருடன் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் உடன் இருந்தார். சுமார் 20 நிமிடம் ஏரியை சுற்றிப்பார்த்த […]
தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர்களில் நடிகை மளவிகாவும் ஒருவர். முன்னணி வேடங்களில் நடித்து வந்த அவர் பின்னர் 2007ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் படங்களில் தலைகாட்டுவதில்லை. தற்போது மளவிகாவிற்கு 38 வயதாகும் நிலையில் அவர் பிட்டாக இருக்க யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராய் லட்சுமி தாம் தூம் படத்தின் மூலம் முகம் தெரிந்த நடிகையாக மாறினார். பின் பல படங்களில் தொடர்ந்து நடிப்பார் என தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் மங்காத்தா, அரண்மனை என சில படங்களுக்கு நல்ல ரீச். இந்நிலையில் அவர் அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் போய்விட்டார். கடந்த அவரின் 50 வது படமாக ஜூலி 2 வெளியானது. இப்படத்தின் மூலம் ஹிந்தியில் அவர் இறங்கினார். படங்களில் குத்து பாடல்களுக்கு ஆடுவது, சின்ன சின்ன கேரக்டர்களில் […]
சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி லண்டனில் பேசும்போது தமிழ்நாட்டின் 125 கோடி மக்களும் தன் குடும்பத்தினர் என கூறினார். இதற்கு பதிலளித்துள்ள நடிகர் கருணாகரன் “என்னையும் என் குடும்பத்தினரையும் அதில் சேர்க்காதீர்கள். சாரி” என கூறியுள்ளார். பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி லண்டனில் கத்துவா பாலியல் வன்கொடுமை பற்றி பேசும்போது ரேப் என்பது ரேப் தான் அதை அரசியலாக்காதீர்கள் என கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் சினிமாவில் ஸ்கீரின் மூலமே முகத்தை காட்டி மொத்த ரசிகர்களையும் ஈர்த்தவர். தனி விளம்பரமோ, மக்கள் மன்றமோ வேண்டாம் என ஒதுங்கியிருப்பவர். ஒவ்வொரு நாளையும் பரபரப்பாக்கும் சமூக வலைதளங்கள் கூட வேண்டாம் நிம்மதியே போதும் என இருக்கிறார். ஆனால் அவரை வைத்து ரசிகர்கள் மிகவும் கொண்டாடுவார்கள். ஒரு முறை அஜித் தனது மேலாளருக்கு போன் கால் செய்திருக்கிறார். அப்போது வேறு ஒரு நபர் போனை எடுத்து பேசி, உங்கள் மேனேஜரின் மாமனார் இறந்துவிட்டார் என சொல்லியிருக்கிறார். […]
சினிமா நடிகைகள் தங்கள் அழகுக்காக இப்போதெல்லாம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்வது, உடற் பயிற்சி, யோகா என பலவற்றை செய்வார்கள். ஆனாலும் என்ன? அவர்களை நினைத்தை சாப்பிடலாம் ஆனால் அதிகமாக முடியாது. அதோடு தனக்கென மேக்கப் மேன்கள், ஆடை வடிவமைப்பாளர், ஹேர் ஸ்பெஷலிஸ்ட் என தனித்தனியாக வேலைக்கு ஆட்களை வைத்திருப்பார்கள். அது போல ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை ஜாக்குலின். அவரிடம் நீண்ட நாளாக மேக்கப் மேனாக பணியாற்றுபவர் ஷான் முட்டத்தில். இவருக்கு அண்மையில் பிறந்த நாள் […]
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது விதி. தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் தற்போது ட்விட்டரில் ஒரு அரசியல் கட்சிக்கு அதரவாக பேசிவருகிறார். அதனால் பலர் அவரை விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில் இப்படி தொடர்ந்து நடந்தால் தான் ட்விட்டரில் இருந்து வெளியேறுவேன் என்றும் […]
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் படங்களையும் அந்தரங்க உரையாடல்களையும் வெளியிட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த சர்ச்சையில் நடிகர் ராணாவின் தம்பி அபிராம், டைரக்டர் சேகர் கம்முலு, எழுத்தாளரும் டைரக்டருமான கோனா வெங்கட், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, தயாரிப்பாளர்கள் வெங்கட அப்பாராவ் ஆகியோர் சிக்கி உள்ளதால் அடுத்து யார் பெயரை வெளியிடுவாரோ என்று பலரும் […]
உத்தர பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை துறையின் தலைவராக இருப்பவர் மருத்துவர் ரிஸ்வான் அகமது கான். கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி ரியா குமாரி என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கான் தலைமையிலான மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 21ல், பிறந்து 244 நாட்கள் ஆன அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஒன்றை நடத்தியது. […]
தமிழ்நாட்டில் பல பிரச்சனைகளுக்காக மக்கள் போராடி வருகின்றனர். இப்போது முக்கிய பிரச்சனையாக பேசப்படுவது காவிரி விவகாரம் தான். எப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்பது தெரியவில்லை, ஆனால் மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் நீங்கள் ஏன் காவிரி விவகாரத்திற்கு குரல் கொடுக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், என்னுடைய வார்த்தையால் உடனே அந்த விஷயம் நடக்கும் என்றால் அதை முதல் ஆளாக செய்வது நான்தான். நான் சொன்னால் உடனே காவிரி […]
இன்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியுடன், நடிகர் ஆனந்தராஜ் சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார். தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி உள்ளார். தமிழகத்தில் இருந்து ரஜினியை பிரித்து பார்ப்பது தவறானது. ரஜினிகாந்த்தை கார்னர் செய்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். எதை நோக்கி ரஜினியை குறி வைக்கிறார்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெரிய வரும். கர்நாடகவில் தற்போது இருந்துவரும் அரசியல்சூழலில் காவிரி வாரியம் அமைக்கப்படாது […]
தூத்துக்குடி 3–வது மைல் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்ற குணசேகர்(வயது 47). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லதா என்ற சகாயலதா(43). குணசேகரனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தார். கடந்த 22–2–14 அன்று வீட்டில் வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனை குணசேகரன் எடுத்து சென்றதாக கருதி, சகாயலதா மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகியோர் அவரை சத்தம் […]
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் முதல் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழில் நகரமாக வளர்ச்சி பெற்று உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் மாவட்ட […]
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ. டி.எஸ்.பி. ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் கிராம மக்கள் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் அருகே திரண்டு போராட்டத்தை தொடங்கினர். அங்கு மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் […]
பாலிவுட் சினிமாவில் படங்களை தாண்டி பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரீனா அகர்வால். இவர் சமீபத்தில் Kya Haal Mister Panchal என்ற சீரியலுக்காக நாய் வைத்து படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறார். திடீரென்று அந்த நாய் அவரின் முகத்தை மோசமாக கடித்துள்ளது. இதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரீனாவிற்கு முகத்தில் சில தையல்கள் போடப்பட்டுள்ளதாம். மருத்துவர்கள் அவரை ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்க கூறியுள்ளனர்.
பிரபல நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதா இளம் பெண்களை மிரட்டி தன் கணவரின் படுக்கைக்கு அனுப்பியதாக ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகை சந்தியா கூறினார். இந்த விவகாரம் பற்றி பதிலடி கொடுத்துள்ள ஜீவிதா அந்த தொலைக்காட்சி மற்றும் நடிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அவர் ஸ்ரீரெட்டியின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீரெட்டி “sexy mood 24×7” என கூறுகிறார். “இந்த விடீயோவை பார்த்த பிறகு.. இவரை ஏமாற்றிவிட்டார்கள் […]
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த செய்யது உமர் காத்தான் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் சுனாமி காலனி யாசின் மகன் சம்சுகனி (37), மனோ (35) உள்பட 7 மீனவர்கள் தாளமுத்துநகர் கடற்கரையிலிருந்து சங்கு குளிக்க சென்றனர். திருச்செந்தூருக்கு தெற்கே 13 கி.மீ. கடல்மைல் தொலைவில் சங்கு குளித்து கொண்டிருந்தபோது, சம்சுகனி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, படகை உடனடியாக ஜீவாநகர் கடற்கரைக்கு திருப்பி, சம்சுகனியை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சம்சுகனி இறந்துவிட்டதாக […]