திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம் , அபிஷேகப்பட்டியில் உள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இது திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கட்டுப்படுத்தி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு சுமார் ஒண்டரை லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு அறிக்கை வெளியிடடார். அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகள் இதுவரை தமிழில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தது தற்போது […]
பாளையங்கோட்டையில் ரோடு விபத்தில் வாலிபர் இறந்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி., நகர், அய்யப்பா நகரைச் சேர்ந்த தாமஸ் மகன் ஆன்டோ(24) என்பவர் நேற்று மாலை முருகன்குறிச்சியில் உள்ள தனது நண்பரை சந்திக்க பைக்கில் வந்து கொண்டிருந்தார். பாளை., மார்க்கெட் ரோடு, போலீஸ் குடியிருப்புக்கு தென் பகுதியில் பைக் வந்த போது அவர் சாலையில் வந்த அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது அங்கே வந்து கொண்டு இருந்த ஒரு காரில் மீது பைக் மோதியது. இதனால் தூக்கி எறியப்பட்ட ஆன்டோ பஸ்சின் பின் […]
சாதிய மோதல்களை தடுக்க பள்ளிகளுக்கு காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைப்பதற்கு கல்வி அலுவலர்களோடு சேர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நெல்லை SP அருண் சக்திகுமார் தெரிவித்தார் மேலும் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 89 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். DINASUVADU
நெல்லை: குற்றாலம் மெயின் அருவி,ஐந்தருவி,பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மழைகளில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
நெல்லை மாவட்டம் அருகே பாபநாசத்தில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. நெல்லை காரையாறு அய்யனார் கோயில் விழாவினையொட்டி அங்கு எற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாபநாசம் அகஸ்தியர் அருவியில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
நெல்லை:நெல்லையில் அறிவியல் மையம் மாணவ, மாணவிகள் சிந்தையை துண்டும் வகையில் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.நெல்லை மாவட்ட அறிவியல் மையம் இந்தியாவில் முக்கிய அறிவியல் மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. 3டி டிஜிட்டல் தியேட்டர், பிளானிக் அவுட்டேரியம், டைனோசரசர் பூங்கா, அறிவியல் மாதிரி அரங்கம், மற்றும் இணையதள வசதியுடன் கூடிய உபகரண அரங்குகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இங்கு அறிவியல் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கோடை காலத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் […]
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது.உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன்,திருமாவளவன்,சீமான்,திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாளை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வினரை […]
நெல்லை பேட்டையில் 2016 ஆம் ஆண்டு தருன்மாதவ் என்ற சிறுவனை கொலைச்செய்த குற்றவாளி ஆறுமுகத்திற்க்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை பேட்டையில் 2016 ஆம் ஆண்டு தருன்மாதவ் என்ற சிறுவனை கொலைச்செய்த குற்றவாளி ஆறுமுகத்திற்க்கு தூக்கு தண்டனை மற்றும் 5 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிப்பு மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் மண்டல அளவில் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமாரி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியின் 2வது நாள் முதல் ஆட்டத்தில் தூத்துக்;குடி – கன்னியாகுமரி மாவட்ட ஹாக்கி அணிகள் மோதின. போட்டி […]
நெல்லை : ஏர்வாடியில் பள்ளி ஆண்டு விழாவில் அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கண்பாதிப்பு சம்பவத்தில் பள்ளி தாளாளர், ஒளி, ஒலி அமைப்பாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் ராமநதி – ஐம்பு நதி இணைப்பு திட்டம் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், டி.ஆர்ஓ முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
நெல்லை: ஏர்வாடியில் அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் எஸ்.ஏ. இந்து துவக்கப்பள்ளி பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு கண் பாதிப்பு கண் பார்வை பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பள்ளி ஆண்டுவிழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர் பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட விவகாரம் காரணமாக கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு […]
நெல்லை : ஏர்வாடியில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற 35 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு அடைந்துள்ளனர். பள்ளியின் ஆண்டு விழாவில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒளி கொண்ட மின்விளக்குகளால் கண் பார்வை பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி ஆண்டு விழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு. கண் பார்வை பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட […]
புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சுமார் 4,600க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்கு வங்க கடலில், இலங்கையின் தெற்கு பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் 3 […]
நெல்லையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் சிறப்பு விற்பனையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். பொதுமக்களும் இப்பொருள்களை ஆர்வமுடன் வந்து வாங்கி செல்கின்றனர்..இதுபோன்ற புதுமையான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் கீழ்ப்பாவூர் பகுதியில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை மு.கருணாநதியின் மூத்த மகனும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மு.க.அழகிரி மற்றும் அவரது பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழை காரணமாக மதுரை,நெல்லை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி 4 மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!
சமிபத்தில் நெல்லையில் கந்துவட்டிக்கு எதிராக தீக்குளித்து இறந்த குடும்பத்தினருக்கு நிகழ்ந்த அநிதியை கண்டு கோபப்பட்டு கார்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிசித்திரம் வரைந்தார்.கார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்தனர் இதையடுத்து, சென்னையில் கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்த போலீசார், நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது பாலா தரப்பில் ஜாமின் […]