சென்னை: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றன. கடந்த முறை ஒன்றாக போட்டியிட அதிமுக – பாஜக, இந்த முறை தனி தனி அணியாக போட்டியிட்டும் தோல்வியடைந்தனர். இதுகுறித்து இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக – அதிமுக கூட்டணி பிரிந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் […]
டெல்லி: இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட NDA கூட்டணி எம்பிக்கள், பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், அமித்ஷா, ராஜ்நாத் சிங், குமாரசாமி என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத்தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் பேசுகையில், 2024 தேர்தல் முடிவுகள் NDA கூட்டணிக்கு வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம். இதனை தோல்வி போல சித்தரிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி […]
டெல்லி: இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டா, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், குமாரசாமி, பவன் கல்யாண் என பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, தன்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இவ்வளவு பெரிய […]
சென்னை: நடந்து முடிந்த மக்களவை தொகுதியில், பாஜகவால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி தான் அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜக 33 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. சமாஜ்வாடி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் வென்று இருந்தன. இதுகுறித்து இன்று திமுக எம்.பி தயாநிதி மாறன் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் விமர்சனம் செய்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் 40க்கு 40 என I.N.D.I.A கூட்டணி […]
டெல்லி: மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியநிலையாக, இன்று டெல்லியில் NDA கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியின் பெயரை நாடாளுமன்ற குழுத்தலைவர் (பிரதமர்) என்று ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். இதனை […]
டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனை அடுத்து, இன்று NDA கூட்டணியில் உள்ள எம்.பிக்கள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம், இன்று டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற […]
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் இந்தியாவில் பல்வேறு பரபரப்பான அரசியல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 2014 , 2019 என கடந்த இரண்டு முறையும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது போல பாஜகவால், இந்த முறை தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. பாஜகவின் NDA கூட்டணியில், மிக முக்கிய அங்கமாக இருக்கும் கட்சிகள், சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் (16 எம்பிக்கள்) , நிதிஷ்குமாரின் ஐக்கிய […]
ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வென்றுள்ளது. பாஜக 8 இடங்களையும், ஜனசேனா 21 இடங்களையும், ஆளும் YSR காங்கிரஸ் 11 இடங்களை யும் வென்று இருந்தது. இந்நிலையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா […]
டெல்லி: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் போல அல்லாமல், இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாத காரணத்தால் கூட்டணியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் தனிப்பெரும்பான்மை ஆட்சி என்பதால் மற்ற கட்சிகளின் கருத்துக்களை கலந்தாலோசிக்காமல் ஆளும் பாஜக தங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இதனால் பாஜகவால் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல், சிஏஏ சட்டம் […]
டெல்லி: மக்களவைத்தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 8) பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். NDA கூட்டணியில் நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்), சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோர் மிக முக்கிய பங்கு வகிக்ன்றனர். இந்த இரு தலைவர்களும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கூறி […]
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. இதற்கான அரசியல் கட்சி ரீதியிலான நடவடிக்கைகளை ஆளும் கட்சி மேற்கொண்டு வருகிறது. அதே போல புதிய அரசு தொடர்பான வேளைகளில் மக்களவை செயலகம் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமயிலான 17வது அமைச்சாராவை கலைக்க பரிந்துரையானது குடியரசு தலைவரிடம் இருந்து மக்களவை செயலகத்திற்கு கிடைப்பெற்றுள்ளதாகவும், அடுத்தகட்டமாக புதிய எம்பிக்கள் பதவி ஏற்க ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 17ஆம் தேதி பதவி […]
தருமபுரி: பாஜக தலையிலான NDA கூட்டணி சார்பாக தர்மபுரி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டார். தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் மணியிடம் தோல்வி கண்டார். சௌமியா 4.11 லட்சம் வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மணி 4.32 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இறுதி வரையில், வெற்றிக்கு அருகில் வந்து சிறு வாக்கு வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வியை சந்தித்தார். சௌமியா அன்புமணி தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த […]
மக்களவை தேர்தல் : 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பாஜக 240 இடங்களை வென்றதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மோடிக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, இந்தியாவுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை, “இரு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டும், எதிர்காலத்தை மனதில் வைத்தும், […]
I.N.D.I.A கூட்டணி: மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சி தலைவர்களும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி தலைவர்களும் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், முதலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆலோசனை கூட்டம், டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. அதில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியினரின் […]
டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் இந்திய அரசியலில் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவுக்கு இந்த முறை தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனை அடுத்து இன்று பாஜக தலைமையிலான NDA கூட்டணியின் அரசியல் தலைவர்கள் இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக […]
மக்களவை தேர்தல் : மக்களவை தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 2024 மக்களவை தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்று, 36.56% வாக்குகளை பெற்றுள்ளது. இந்நிலையில், பாஜக வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது அறிக்கையில், “18வது மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையின்கீழ், தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ள […]
கோவை தொகுதி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40க்கு 40 என்ற சாதனையை திமுக படைத்துள்ளது. அதில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலும், மூன்றாவது முறையாக ஆட்சி […]
டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பின்னர் அதிகளவு பரபரப்பாக இயங்கி வரும் இடமாக டெல்லி தற்போது மாறி வருகிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் இன்று டெல்லியில் வெவ்வேறு இடங்களில் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், அபிஷேக் பானர்ஜி ஆகியோர் கார்கே இல்லத்திற்கு வந்துள்ளனர். […]
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி இந்திய அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றியுள்ளது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் அங்கம் வகித்து இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியயோர் பாஜக ஆட்சியமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் இருவருமே , முன்னர் பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்த்த தலைவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், […]
மக்களவை தேர்தல் : நேற்று வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 240 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக, தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள நரேந்திர மோடி இல்லத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜன நாயக கூட்டணித் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தில் நிதிஷ்குமார், சந்திரபாபு […]