டெல்லி: கடந்த 3 தேர்தல்களில் 100ஐ கூட தாண்டாத காங்கிரஸ் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இனி வரும் தேர்தல்களிலும் பாஜக கூட்டணியே வெல்லும் என பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். 18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து […]
டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். 18வது மக்களவை கூட்டத்தொடர் முதல் கூட்டம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று மற்றும் இன்று மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர் . நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியதை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி, குடியரசு தலைவர் […]
ராகுல் காந்தி: இந்திய கூட்டணி கட்சிகளின் மக்களவை குழு தலைவர்களின் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகப்பட்டார். இதனால், இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறி பதிவிட்டிருக்கிறார். […]
டெல்லி: 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயம் அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது. அரசுக்கு எதிராக யாரும் கருத்துக்கள் தெரிவிக்க கூடாது, அரசுக்கு எதிரான செயல்பாடுகள் இருக்க கூடாது என சட்டங்கள் கடுமையாக இருந்தன. இந்த அவசரநிலை 1977, மார்ச் 21 வரையில் அமலில் இருந்தது. எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தி இன்றோடு 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு கண்டனம் தெரிவித்தார். […]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் இன்று ஓம் பிர்லா புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பிரதமர் மோடி , எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட அவசரகால (எமெர்ஜென்சி) நிலை பற்றி குறிப்பிட்டு கண்டனங்களை பதிவு செய்தார். அவர் மேலும் கூறுகையில், 1975ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை முடிவை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது. […]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் NDA கூட்டணி வேட்பாளர் பாஜக எம்பி ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவையில் பேசிய ராகுல் காந்தி, மக்களவையில் மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் எழுப்ப அனுமதிக்கப்படுவார்கள் […]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மிக முக்கிய நிகழ்வான மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் NDA கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிட்டார். I.N.D.I.A கூட்டணி சார்பாக காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிட்டார். இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் சபாநாயகர் தேர்தல் தொடங்கியது. அதில், ஓம் பிர்லாவை பிரதமர் மோடி சபாநாயகராக முன்மொழிந்தார். […]
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மக்களவை சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளரை ஒரேமனதாக தேர்வு செய்ய அக்கட்சி முயற்சி செய்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஒருமித்த முடிவு எட்டப்படாத நிலையில், NDA கூட்டணி சார்பாக ஓம் பிர்லாவும், I.N.D.I.A கூட்டணி சார்பாக கே.சுரேஷும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, […]
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி பிராமணம் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை அடுத்து நாளை மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு இன்றுடன் நிறைவுபெறுகிறது. மக்களவை சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய பாஜக தலைமையிலான NDA கூட்டணி முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையை இன்று நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதற்காக காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடம் […]
டெல்லி: மக்களவை தேர்தல் முடிந்து நேற்று 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவியேற்பு நடைபெற்று முடிந்த பின்னர் நாளை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி தேர்தல் தவிர்த்து ஒரேமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார். சபாநாயகர் தேர்வு […]
டெல்லி: கடந்த ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜூன் 9ஆம் தேதி பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைத்தது. பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். காங்கிரஸ் கட்சி 99 எம்பிக்களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்த்து பெற்றுது. கடந்த ஜூன் 9ஆம் தேதி முதல் தற்போது வரையில் கடந்த 15 நாட்களில் நாட்டில் 10 பிரச்சனைகள் நடந்துள்ளாதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளர். அது பற்றி […]
டெல்லி: தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக 18வது மக்களவை கூட்டத்தொடர் இன்று புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். அதற்கு முன்னதாக தற்காலிக மக்களவை சபாநாயகராக பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தப்விற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை அடுத்து, புதிய தற்காலிக சபாநாயகர் மற்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். புதிய உறுப்பினர்கள் புதிய […]
டெல்லி: மக்களவை சபாநாயகர் யார் என்பது குறித்த ஆலோசனையை பாஜக, NDA கூட்டணி கட்சிகளுடன் வரும் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற முக்கிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இன்னும், மக்களவை சபாநாயகர் யார் என்று அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் […]
த.வெ.க விஜய்: இந்தியாவில் உள்ள மொத்த 543 தொகுதிகளிலும் 7- கட்டங்களாக தேர்தல் நடைபெற்று அதற்கான முடிவுகளும் கடந்த ஜூன்-4 வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்கள் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் நரேந்திர மோடி 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்கும் விழாவானது நேற்று மாலை நடந்தது, 3-வது முறையாக பதவியேற்கும் மோடிக்கு உலகெங்கிலும் இருந்து பல நாட்டுகளின் பிரதமர்களின் வாழ்த்துக்கள் குவிந்தது. […]
டெல்லி: உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 7 மணி அளவில் இந்தியவின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், நாளை முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இப்படியான சூழலில், NDA கூட்டணியில் முக்கிய கட்சிகளாக இருக்கும் […]
டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர், காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. 2 மக்களவை தேர்தல்களை அடுத்து காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சி அந்தஸ்த்து பெற்றுள்ளது. இருந்தாலும் தோல்வி குறித்தும், காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய […]
டெல்லி: நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக எதிர்க்கட்சிகள் கூறியதாக JDU செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி அதன் பரபரப்புகள் இன்னும் நீண்டு கொண்டு இருக்கிறது. இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை கூட்டணிகளை ஒன்றிணைந்து NDA கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளது. இந்த கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், சந்திரபாபு நாயுடுவின் JDU கட்சியும் மிக முக்கிய பங்காற்றுகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் […]
மோடி: வருகிற ஜூன்-9ம் தேதி அன்று அவர் 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர செல்வதற்கு முன்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைவரான நட்டா இல்லத்தில் மோடி உட்பட என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். அதனை தொடர்ந்து குடியரசு தலைவரான திரௌபதி மும்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு […]
டெல்லி : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் நடைபெற்ற NDA கூட்டணியின் கூட்டத்தில், நரேந்திர மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நரேந்திர மோடி மூத்த பாஜக தலைவர்களான லால் கிருஷ்ண அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் […]
டெல்லி : பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்கள் & எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடியை தேர்வு செய்ய வேண்டுமென அமித்ஷா முன்மொழிந்தார், இதனை ராஜ்நாத் சிங், நட்டா வழிமொழிந்தனர். இதனைத் தொடர்ந்து 293 எம்.பி.-க்களும் ஒரு மனதாக மோடியை மீண்டும் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். 3ஆவது முறையாக அவர் பிரதமராக தேர்வு […]