நவம்பர் மாதம் நடைபெறவுள்ள NDA தேர்வுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்ப்பது தொடர்பாக ஏற்கனவே அரசாங்கம் நீதிமன்றத்துக்கு உறுதி அளித்திருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சகம் தேசிய பாதுகாப்பு அகாடமியின் மூலமாக இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் பெண்களை சேர்ப்பதற்கான உறுதிமொழியையும் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தது. இருப்பினும் பெண் தேர்வாளர்கள் இந்த தேர்வில் பங்கேற்பதற்கான அனுமதி குறித்த அறிவிப்பு, அடுத்த ஆண்டு […]