சென்னை : இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தி.மு.க, திராவிடர் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்), வி.சி.க, அ.தி.மு.க, தவெக, உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன்காரணமாக அதனை உணர்த்துவதற்காக தான் இந்த அனைத்துக்கட்சி […]
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா நடைபெற்றது. அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை போல பொதுமக்கள் பலரும் மலர்தூவி தங்களுடைய மரியாதையை செலுத்தினார்கள். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவுகூர்ந்து வருகிறார்கள். குறிப்பாக, முதல்வர் […]
டெல்லி : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 10 நாட்கள் கடந்த நிலையில், பாஜக தலைமையகம் முதலமைச்சர் பதவிக்கான முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணமே பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் தான். இப்போது, பிரதமர் மோடி சுற்று பயணங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள நிலையில், பாஜக மேலிடம் விரைவில் முதலமைச்சர் […]
டெல்லி : வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் காட்சிகள் தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டனர். இந்நிலையில், இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தும் விட்டது. இந்த சூழலில்,டெல்லியில் பாஜக தான் வெற்றிபெறும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் பேசிய அவர் ” பாஜகவை பொறுத்தவரை சொன்னதைச் செய்வார்கள் என மக்கள் நம்புகின்றனர். ஏனென்றால், அந்த அளவுக்கு பாஜக செயல் […]
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் காட்சிகளின் தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டம் வேண்டாம் எனவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற […]
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறும் எனவும் , இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்போது வரை இது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இதனை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் கடும் கோபத்துடன் இந்தி பேசாத மாநிலங்களில் என்ன காரணத்துக்காக இந்தி […]
Narendra Modi: கர்ப்பவாய் புற்றுநோய்க்கு இந்தியப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்க வழிவகை செய்வதே தனது இலக்கு என பிரதமர் மோடி தகவல். மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், உலகக் கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் உடனான உரையாடலின் போது தன்னை தொடர்ந்து நடத்துவது என்ன, ஓய்வு பழக்கம் உள்ளிட்டவை குறித்து சுவாரசியமான தகவல்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அதன்படி தனக்கு ஓய்வு என்பது autopilot முறையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உதாரணமாக, இரவு வெகுநேரம் வரை வேலை செய்த பின்னும் […]
CPI Mutharasan : திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி பேசிய நிலையில் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். நரேந்திர மோடி தமிழ்நாட்டின் வருகை தந்த போது பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது பேசுகையில், ”மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கட்சி துடைத்து எறியப்படும்” என கடுமையாக விமர்சித்திருந்தார். Read More – மக்களவை தேர்தல்..! தேமுதிக தலைமை வெளியிட்ட அறிவிப்பு இதற்கு […]
Narendra Modi: மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தலானது 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. Read More – விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19… இடைத்தேர்தலுக்கான முழு அட்டவணை இதோ! இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய […]
Ujjwala Yojana: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமையல் எரிவாயு திட்ட மானியத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமையல் எரிவாயு மானியத்திற்காக ரூ. 12,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உஜ்வாலா யோஜனா பயனாளிக்கு எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த திட்டமானது தற்போது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ. 12,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். Read More […]
Narendra Modi: ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகை தந்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள மோடி இன்று தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வந்துள்ளார். தனி விமானம் மூலம் சென்னை நகருக்கு அவர் வந்தடைந்தார், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் […]
Narendra Modi: நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் நிதியாக பிரதமர் நரேந்திர மோடி ரூ. 2000 வழங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அந்த வகையில், crowdfunding எனப்படும் பொது நிதி திரட்டும் பிரசாரமான தேசத்திற்கு நன்கொடை (‘Donate for Desh’ ) என்னும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி அண்மையில் அறிவித்து நன்கொடை பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ‘தேசத்தை கட்டியெழுப்ப நன்கொடை’ […]
BJP: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தேதி வெகுவிரைவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2 நாட்களாக பாஜக தலைவர்கள் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். Read More – குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்த சித்தராமையா..! நேற்று முன்தினம் டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் […]
நாட்டின் மிக நீண்ட கேபிள் பாலம் சுதர்சன் சேதுவை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.979 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 4 வழி கொண்ட இந்த கேபிள் பாலமானது 27.20 மீட்டர் அகலம் கொண்டதாகும். இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்ற இந்த பாலம் குஜராத்தின் ஓகா முதல் பெய்த் துவாரகா தீவு வரையிலான பகுதிகளை இணைக்கின்றது. பாலத்தை திறந்த பின்னர் ஓகா துறைமுகத்திற்கு அருகே 30 கி.மீ. தொலைவின் […]
குஜராத் மாநிலத்தின் துவாரகா நகரில் ரூ. 978 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஓகா-பேட் துவாரகா சிக்னேச்சர் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25 ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். புனித யாத்திரை தலமான துவாரகாவில் ஓகா மற்றும் பெய்ட் இடையே 2.5 கிலோமீட்டர் நீளத்தில் பாலம் அமைந்துள்ளது. துவாரகாதீஷ் கோவிலுக்கு வருகை தரும் உள்ளூர்வாசிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு இந்த பாலம் மிகவும் உபயோகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழாவுடன் […]
பிப்ரவரி 13, 14 தேதிகளில் இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கவுள்ளார். இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 2015 ஆம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்வது இது ஏழாவது முறையாகும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. அதன்படி, ஜனவரி 2,1954 முதல் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. அந்தவகையில், நாட்டிலேயே மிக உயர்ந்த விருதாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், […]
கோவில் கட்டினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா என்று ராமர் கோவில் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது இவ்வாறு கூறினார். அப்போது, “ திமுகவின் இளைஞரணி மாநாட்டில் ஒரு தீர்மானம் கூட மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை; நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் வாக்குறுதி நாடகம். வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சரியான கூட்டணியை […]
2023 ஐசிசி 13வது உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களின் ஆரவரத்துக்கு மத்தியில் தொடங்கியது. ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று 45 லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி […]
சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் சென்றார். பிர்சா முண்டாவின் சொந்த ஊரான உலிகட்டு கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தய பிரதமர் மோடி, பழங்குடியின வளர்ச்சிக்கான, விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ராவை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 15-ஆவது தவணை தொகையை விடுவித்தார். 8 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.18,000 […]