ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – நாராயணசாமி

Narayanasamy

கடந்த 10-ஆம் தேதி, புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். … Read more

கிரண்பேடி விஷம் வைத்து கொல்வார்.! தமிழிசை சர்க்கரை கொடுத்து கொல்கிறார்.! நாராயண சாமி விமர்சனம்.!

அண்ணன் ரங்கசாமி என தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அன்பாக அழைத்து முதுகில் குத்தி வருகிறார். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி. புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் பேசுகையில், தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீதும், புதுச்சேரி ஆளுநர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வைத்து பேசினார். அவர் கூறுகையில், நாங்கள் ஆட்சி செய்யும் போது ஆளுநராக இருந்த கிரண்பேடி எங்களுக்கு தொல்லை கொடுத்தார். அதனை … Read more

இதை வைத்து இனி பாஜக ஆட்சியை பிடிப்பது நடக்காது – முன்னாள் முதலமைச்சர்

ஆதீனங்கள் மடங்களைவிட்டு வெளியே வந்து அரசியல் பேசலாம் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் பேட்டி. கோயில்களில் நடைபெறும் சில தவறுகளை தடுக்க வேண்டியது அமைச்சர்களின் கடமை என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கோயில்களில் நடைபெறக்கூடிய தவறுகளை தடுக்கும் பணியைத்தான் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். மத அரசியல் செய்து மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என பாஜக செயல்பட்டு வருவதாகவும் குற்றசாட்டினார். மதத்தை வைத்து பாஜக ஆட்சியை பிடிப்பது … Read more

நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு – 7 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருமே குற்றவாளிகள் என தீர்ப்பு. புதுச்சேரியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமி (மத்திய அமைச்சராக இருந்தபோது) வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த விசாரணையில் தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம் உள்பட 6 … Read more

திருநள்ளாற்றில் ஓட்டுக்குத் தங்கம் ! விசாரணை நடத்த நாராயணசாமி வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள 149 தங்க காசுகள் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளார் தொகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்தபோது 149 தங்க காசுகள் ரூ.90 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.பறக்கும் படையினர் சோதனை செய்தபோது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.அவர்கள் காவல்துறையினர் கண்டதும் தாங்கள் வைத்திருந்த பையை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளனர். காவல்துறையினர் அதனை … Read more

இது பாஜக-விற்கு கை வந்த கலை…! வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்த நாராயணசாமி …!

வருமான வரித்துறை சோதனைக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  வருமான வரித்துறையினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு திமுக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுகவும், பாஜகவும் தோல்வி பயத்தால் வருமான வரித்துறையை ஏவி விட்டு, மு.க.ஸ்டாலினின் குடும்பத்திற்கு களங்கம் விளைவிக்க வேண்டும், மக்களை மத்தியில் தவறான … Read more

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளது-நாராயணசாமி.!

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக இருக்கிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் திமுக நிர்வாகிகள் சிவா, சிவக்குமார் உள்ளிடோர்  ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ், திமுக, … Read more

பொய் பேசுவதற்கு விருது கொடுக்க வேண்டும் என்றால் அது அவருக்குத்தான் – அமித்ஷா

புதுச்சேரி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என கூறியுள்ளார். பொய் பேசுபவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்றால் அதை நாராயணசாமிக்கு தான் தரவேண்டும் என விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் ஊழலை வளர்க்கும் வேலையை மட்டுமே … Read more

புதுச்சேரிக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை– பிரதமர் மீது முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!

புதுச்சேரி மாநிலத்திற்கு புதிதாக எந்தவொரு திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநிலத்திற்கு புதிதாக எந்தவொரு திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், பிரதமர் மோடி மக்களை திசை திருப்ப பொய்யான தகவல்களை கூறிவருவதாக தெரிவித்தார். மேலும், பண பலம் மற்றும் அதிகார பலம் காரணமாக ஆட்சிக்கு … Read more

பொய் சொல்லி மக்களை ஏமாற்றியவர் நாராயணசாமி…! பிரதமர் மோடி விமர்சனம்…!

பொய் கூறுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும்? சமீபத்தில் புதுச்சேரி சென்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி,  சோலை நகர் பகுதியில் உள்ள கடலோர மக்களோடு உரையாற்றினார். அப்போது பேசிய மூதாட்டி  ஒருவர், மழை, புயலினால் பாதிக்கப்பட்ட போது, புதுச்சேரி முதல்வரான நாராயணசாமி சந்தித்து, நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால், புதுச்சேரி முதல்வர், அதை ராகுல் காந்தியிடம் மொழி பெயர்த்து கூறும் போது, மழை, புயலினால் பாதிக்கப்பட்ட போது சந்தித்து … Read more