Tag: muslims

முஸ்லிம்கள் தான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைக்கு காரணம் – மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர்!

ராம நவமி தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர்,பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதால்  அதை சாப்பிட கூடாது என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களிடம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் பிரச்சனை செய்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுதும் இது குறித்து பேசியுள்ள […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image

மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!

மிலாதுன் நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து.  நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி திருநாளை அனுசரித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமிய பெருமக்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

#Modi 2 Min Read
Default Image

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சீனா முஸ்லிம்களுக்கு புதிய விதிகள் அறிவிப்பு – சீன அரசு

ஹஜ் பயணம் செய்வதற்கு சவுதி அரேபியாவுக்குச் செல்லும் சீனா முஸ்லிம்களுக்கு புதிய விதிகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவிற்கு ‘ஹஜ்’ பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு சீனா புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த யாத்திரை நாட்டின் இஸ்லாமிய சங்கத்தால் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், யாத்ரீகர்கள் சீன சட்டங்களை பின்பற்றி மத தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். சீனாவில் சுமார், 20 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதில், பெரும்பாலும் உய்குர்கள் – துருக்கிய வம்சாவளியைச் […]

#China 4 Min Read
Default Image

ரம்ஜான் பண்டிகைக்கு முன் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடிக்கும் முறைகள்!

ரம்ஜான் பண்டிகைக்கு முன் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடிக்கும் முறைகள். ஒவ்வொரு வருடமும், முஸ்லிம்கள் தங்களது ரம்ஜான் பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவதுண்டு. இஸ்லாமியர்கள் ஒன்பதாம் மாதத்தில், இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், நோன்பை அனுசரிக்கின்றனர். இசுலாமிய நம்பிக்கையின்படி முகமதுநபி முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுசரிப்பதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பானது, இசுலாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நோன்பானது வயது […]

Fasting 3 Min Read
Default Image

பாகிஸ்தானில் மசூதியில் நடைபெற்ற தொழுகை! தடுத்து நிறுத்திய போலீசாரை விரட்டியடித்த மக்கள்!

சீனாவை தொடர்ந்து பல இடங்களில் கொரோனா வைரஸானது மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களது நாட்டை பாதுகாத்து கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது.  கோவில்கள், ஆலயங்கள் மற்றும் மசூதிகளில் எந்த மத வழிபாடுகளும் நடத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை […]

#Corona 3 Min Read
Default Image

குடியுரிமை திருத்த சட்டம் : அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டம்  பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அப்பொழுது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது. அப்பொழுது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இஸ்லாமிய அமைப்பினருடன் தலைமைச் செயலாளர் பேசியது என்ன ?  என்று கேள்வி எழுப்பினார். இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.குடியுரிமை திருத்த […]

#DMK 2 Min Read
Default Image

பள்ளிவாசலில் இந்து மத முறைப்படி திருமணம் நடத்திய இஸ்லாமியர்கள்…!

சேரவல்லி பகுதியில் இருக்கும் மசூதியில் செயல்பட்டு வரும் முஸ்லிம் ஜமாத் கமிட்டி நேற்று பள்ளிவாசலில் இந்து முறைப்படியே ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்தனர். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் “கேரள மக்களின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என பதிவிட்டு உள்ளார். கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி பகுதியில்இருக்கும் மசூதியில் செயல்பட்டு வரும் முஸ்லிம் ஜமாத் கமிட்டிக்கு கடந்த நவம்பர் மாதம் கடிதம் ஓன்று வந்தது. அந்த கடிதத்தில் கணவரை இழந்த பிந்து என்ற பெண் […]

#Kerala 5 Min Read
Default Image

தமிழகத்தில் NRC-ஆல் முஸ்லிமிகளுக்கு பாதிப்பு வந்தால் அதிமுக தான் முதல் குரல் கொடுக்கும்..அமைச்சர் பகிர் பேச்சு.!

2020 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 9ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.  தமிழகத்தில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட, அவர்களை பாதுகாக்கும் முதல் குரலாக அதிமுக தான் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.  2020 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதில் முதலமைச்சர் எட்டப்படி […]

#ADMK 4 Min Read
Default Image

முஸ்லிம்கள் போராட்டத்தில் அமைதி காக்க வேண்டும்.! ஷியா பிரிவு தலைவர் வேண்டுகோள்.!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் மக்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் . அரசியல் கட்சிகள் திசை திருப்புவதால், முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அசாம் மாநிலத்தில் மட்டும் தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார். இதனால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு […]

CABBill 3 Min Read
Default Image

இதான் நம்ம ஊரு.! போராட்டங்களுக்கு இடையையும் ஐயப்ப பக்தர்களுக்கு வழிவிட்ட இஸ்லாமிய நண்பர்கள்.!

குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று கோவையில் இஸ்லாமியர்கள் பங்குபெற்ற CAA எதிர்ப்பு போராட்டம் வழியாக வந்த ஐயப்பன் பக்தருகளுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் வழிவிட்டு அனுப்பி வைத்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், […]

#Coimbatore 4 Min Read
Default Image

“இந்தியா முழுவதும் இந்துக்கள்”ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்சை பேச்சு..!!

இந்தியாவில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது- டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்ஷின் 3 நாட்கள் மாநாடு நடைபெற்றது வருகிறது. இதில் இரண்டாவது நாள் பேசிய  2-வது நாளான நேற்று பேசிய மோகன் பகவத், இந்துத்வா என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியது. நாம் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதற்குப் பெயர் இந்துத்வா அல்ல என்று பேசினார்.  “இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள். இவ்வாறு […]

#BJP 3 Min Read
Default Image

பத்மாவத் படத்திற்கு போராட வேண்டியது இந்துக்களா அல்லது முஸ்லிம்களா…??

  பல பிரச்சினைகளுக்கு பிறகு வெளியான திரைப்படம். ஆனால் படத்தில் இந்து அமைப்புகள் சொன்ன கருத்து எதுவும் இல்லை. ராஜபுத்திரர்களை உயர்வாகவும், வீரமாகவும் தான் காட்டியுள்ளனர். பத்மாவதி கதாபாத்திரம் இறுதிவரை கண்ணியமாக இருக்கிறது. அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரமாக ரன்வீர்சிங் சிறப்பாக நடித்திருக்கிறார். பதவி வெறி, காம வெறி, எதையும் வெற்றி கொள்ள எதையும் செய்பவர். மிகவும் மோசமான மன்னன். ஒரு காட்சியில் பத்மாவதி கூறுவாள், அலாவுதீன் கில்ஜி அரசனல்ல, அரக்கன் என்பாள். பத்மாவதியாக தீபிகா படுகோன் நேர்த்தியாக […]

#Protest 3 Min Read
Default Image

பிரதமர் மோடியின் மன்கி பாத் பொய்யுரை…!

“ஒரு முஸ்லீம் பெண் ஹஜ் பயணம் செல்லவேண்டுமென்றால் ஒரு ஆண் துணையோடுதான் செல்ல முடியும் என்று இதுநாள்வரை நிலவிய நிபந்தனையை எனது அரசு மாற்றியுள்ளது. இதனால் ஹஜ் பயணம் செல்வதற்கு ஏராளமான முஸ்லீம் பெண்கள் மனு செய்துள்ளனர்” மன் கி பாத் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி அவிழ்த்து விட்ட பொய்களில் இதுவும் ஒன்று. . ஆனால் இந்த விதியை போட்டது சவூதி அரேயிய அரசு. அதனை மாற்றி உத்தரவிட்டதும் சவூதி அரசுதான்.  நமது இந்திய நாட்டின் பிரதமர் […]

#Politics 2 Min Read
Default Image