புதுச்சேரியில் பாஜக அலுவலகம் சூறை!அமைச்சர் பதவி பங்கீட்டில் குழப்பம்..!

புதுச்சேரி பாஜக அலுவலகத்தை எம்.எல்.ஏ.ஜான்குமாரின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு சூறையாடினர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.முன்னதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜான்குமார்,பாஜக சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையில்,நீண்ட இழுபறிக்கு பின்னர் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து,புதுச்சேரி சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.ஆனால்,அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவில்லை.மேலும்,பாஜகவின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஜான்குமார் … Read more