தேர்தல் முக்கியம், பிரச்சாரம் முக்கியம், அதே நேரத்தில் உயிரும் முக்கியம் ​- அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவினால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அந்த தொகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பணி இடத்தை இன்று திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை 10 ஆண்டுகால ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. … Read more

முதல்வர் வேட்பாளரை ஜே.பி நட்டா தான் அறிவிப்பார் – அமைச்சர் பேட்டி

முதல்வர் வேட்பாளரை ஜே.பி நட்டா அறிவிப்பார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்தான். யார் முதல்வர் வேட்பாளர் என்று முருகனோ, வானதியோ அறிவிக்க முடியாது. ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு வருகை தரும் தேசிய கட்சி தலைவர் ஜே.பி நட்டா தான் அறிவிப்பார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதிமுகவின் முதல்வர் … Read more