ஸ்டெர்லைட் துப்பாகிச்சூடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. தூத்துக்குடி எம்எல்ஏ சண்முகநாதன், தமிமுன் அன்சாரி, தினகரன் ஆகிய மூவரில் ஒருவர் தீர்மானம் கொண்டு வருகின்றனர். அவசர கவனதீர்மானமாக ஸ்டெர்லைட் விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது தொடர்பாக பதிலளிக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மும்பை பங்குச் சந்தை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பசுமைத் தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய […]