எச்சரிக்கை…டெல்லியில் குறைந்து தமிழகத்தை வாட்டும் வெப்பநிலை.!

DHELI - tn weather

Temperature: டெல்லியில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையான 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. READ MORE – உணவு விருந்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம் அதாவது, தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை … Read more

ஆந்திராவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Michaung Cyclone

ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே பாபட்லா கடற்கரையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, தீவிர புயலாக மிக்ஜாம் புயல் மாறியது. இதனால், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பொழிந்துள்ளதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி … Read more

எந்த தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முழு விவரம்.!

இன்று மாலை உருவாகும் புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  சென்னை தென் கிழக்கு பகுதியில் 770கிமீ தூரத்திலும், காரைக்கால் கடற்கரையில் இருந்து 690கிமீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.அது  இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் எனவும் , இன்று மாலை புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வ மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். … Read more

#Alert:இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் !

சென்னை:தமிழகத்தில் நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.இதனால்,பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தின் நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தென் … Read more

#Breaking:இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்!

சென்னை:நாகை,மயிலாடுதுறை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை,மயிலாடுதுறை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைப்போல,தஞ்சை,திருவாரூர்,அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்றும்,நாளையும் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலர்ட்…இன்று இந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை:தமிழகத்தில் கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டி (5.8 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும்,டெல்டா மாவட்டங்கள்,கடலூர்,விழுப்புரம்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும்,உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் … Read more

#Breaking:நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,பல்வேறு பகுதிகள் தொடர் மழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் 1000 மிமி அளவு மழை பதிவாகியுள்ளது.மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று … Read more

மக்களே எச்சரிக்கை : இன்னும் 12 மணி நேரம் தான் இருக்கு..!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சாலைகளில் நீர் தேங்கி காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை தொடரும் ….!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை தொடரும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வருகிற 7ஆம் தேதி … Read more

#Breaking:4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் ..!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம்,தூத்துக்குடி,நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதேபோல,நாளையும் தென்காசி,நெல்லை,ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,அக்.31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more