ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் அப்பு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும், மெர்சி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் வெளியில் சுற்ற சென்றுள்ளனர். அப்போது, வண்டலூர் – மிஞ்சூர், 400 அடி சாலை அருகே ராட்சச கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது திடீரெனெ கால் தடுமாறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், அப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த […]