நான் ஓய்வை அறிவிக்கவில்லை…மேரி கோம் விளக்கம்..!
ஆறு முறை உலக சாம்பியனும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திப்ருகாரில் நடந்த ஒரு நிகழ்வில் அறிவித்ததாக சில ஊடகங்கள் தகவலை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை என்று மேரி கோம் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து குத்துச்சண்டை சாம்பியனான மேரி கோம் கூறுகையில், “நான் இன்னும் எனது ஓய்வை அறிவிக்கவில்லை. … Read more