மக்களவையில் நேற்று முன்தினம் நாட்டின் பொருளாதாரம் பற்றிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி குறைந்து கடந்த 7 ஆண்டுகளாக மந்தநிலையில் இருப்பதாகவும் , வேலைவாய்ப்பு இல்லை எனவும் கருத்துக்களை தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக ஆனந்த் சர்மா சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.அதில் தொழிற்சாலைகள் மூடியதால் நாட்டில் 2.5 கோடி தொழிலாளர்கள் வேலையை இழந்து உள்ளனர்.இதற்கு பாஜகவின் தவறான பொருளாதார கொள்கை என குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா […]