சிவகாசி : விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நிர்வாகியை, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் தேசபந்து மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்பொழுது, இந்த விழா மேடையில் விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் பொன்னாடை அணிவிப்பதற்காக வரிசையில் வராமல், முந்திக் கொண்டு வந்ததால் கோபமடைந்த ராஜேந்திர […]
கீழடியில் உள்ள பொருட்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டட வளாகத்தில் கண்காட்சிக்காக தற்காலிகமாக வைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது.இதனை தொடந்து அங்கு சுற்றுலாவிற்காக பல தரப்பினரும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கீழடி குறித்து கூறுகையில்,கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 750 தொல் பொருட்கள், மதுரை உலக தமிழ் சங்க கட்டட வளாகத்தில் கண்காட்சிக்காக தற்காலிகமாக வைக்கப்படும். […]