#Breaking: “கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை”- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து அவர் வரும் 19-ம் தேதி தனது பதவியை ஏற்க இருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த … Read more

#Breaking: “ஆல் பாஸ் என அரசு அறிவித்ததை ஏற்க இயலாது”- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அரியர் தேர்வு ரத்து செய்து “ஆல் பாஸ்” என அறிவித்து, பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக … Read more

“தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்!”- சென்னை உயர்நீதிமன்றம்!

சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. தமிழகத்தில் சிமெண்ட் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கோவை மாநகராட்சி சிமெண்ட் ஒப்பந்ததாரர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்.. இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!

குட்கா உரிமை மீறல் நோட்டீஸூக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்தது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசை எதிர்த்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், அந்த வழக்கு … Read more

“தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகளை பதிவு செய்து வெளியிட முடியுமா?” தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகளை தனியார் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கு பல வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசு வழங்கிய நிலையில், ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகளை தனியார் பள்ளிகளில் எப்படி … Read more

“காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?”- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் பொது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரின் இறுதி அஞ்சலியில் தெண்மண்டல ஐஜி முருகன், தமிழக டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, … Read more

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரம் வெளியானது!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை என 815 பக்கங்கள் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பின் முழு விவரம் வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018- ம் ஆண்டு, மே 22-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, 2018 மே 28- ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து வேதந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி … Read more

பதஞ்சலியின் கொரோனா மருந்தான “கொரோனில்” மருந்தை பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி!

பதஞ்சலி நிறுவனம் தயாரித்த “கொரோனில்” மருந்தை 2 வாரம் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த வைரஸ் பரவலை தடுக்க, பல நாடுகள் தடுப்பு மருந்துகளை தயாரித்து, சோதனை செய்யும் முயற்சியில் தீவிரமடைந்து வருகின்றனர். அந்தவகையில், கொரோனா சிகிச்சைக்கு யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்தான “கொரோனில்” மருந்தை அறிமுகப்படுத்தினார். இந்த மருந்தின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை, திருவான்மியூரைச் … Read more

“அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும், முருகனும் பேசப்போகிறார்கள்?”- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

நளினி மற்றும் முருகன் அவர்களது உறவினர்களிடம் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் முருகனின் தாய், சகோதரியிடம் முருகனும், நளினியும் பேச அனுமதி கோரி கோரிக்கை … Read more

தமன்னா, விராட் கோலியை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த நடிகை தமன்னா மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது … Read more