ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் மோசமான தோல்விக்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு பாஸிடிவான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, காயமடைந்த லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு மையத்திலிருந்து உடற்தகுதி அனுமதி பெற்றுள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ ஊடகம் தெரிவித்துள்ளது. அவேஷ் கான் முழங்கால் […]
விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 65/5 என்ற நிலையில் பரிதவித்த டெல்லி […]
டெல்லி : 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்டை இந்த முறை 2025 -ஆம் ஆண்டுகான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 27 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்தது. எனவே, அவருடைய பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீதும் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் போட்டி லக்னோ அணி டெல்லி அணிக்கு எதிராக தான் மார்ச் 23 -ஆம் தேதி விளையாடியது. இந்த போட்டியில் லக்னோ அணி […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 4-வது போட்டி மார்ச் 25-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி தான் தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது. டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே அசுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டம் தான் என்று சொல்லலாம். ஏனென்றால், லக்னோ வைத்த 210 என்ற இலக்கை துரத்தி கொண்டிருந்த […]
ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே நடைபெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தால், லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி வெற்றி பெற 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது லக்னோ அணி. […]
விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த அணியில் மார்ஷ்(72), பூரன்(75) ஆகியோர் அதிரடியாக விளையாடி டெல்லி அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டனர். தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ்(36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 72 அடித்து முகேஷ் குமாரால் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவருடன் […]
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. புது கேப்டன்களுடன் மோதி வரும் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணி பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் அதிரடி காட்டி வந்த லக்னோ ஆட்டத்தின் பாதியில் அணியில் அடுத்தடுத்த விக்கெட்கள் சரிய தொடங்கியது. தொடர்ச்சியாக ரன்கள் எடுத்த பிறகு லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் […]
விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில் களமிறங்கவே இல்லை. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த சீசனில் புது கேப்டன்களுடன் இந்த 2 அணிகளும் மோதுகிறது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும், லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீசி வருகிறது. ஆனால், பிளேயிங் பிளேயிங் […]
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது, மாலை 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இப்பொது டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் இந்த இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் […]
டெல்லி : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியை லக்னோ அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுடைய பெரிய கவலையாக இருக்க கூடிய விஷயம் என்னவென்றால் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் விளையாடுவாரா இல்லையா? என்பது தான். ஏனென்றால், அவருடைய காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்த […]
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சு தூணாக இருந்த ஒரு வீரர் என்றால் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தான். ஏனென்றால், 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவருடைய கவனத்தையும் தனது பக்கம் திருப்பி இருந்தார். அது மட்டுமின்றி, 7 விக்கெட்கள் வீழ்த்தியும் அசத்தி இருந்தார்.விலா எலும்பிற்கும் இடுப்புக்கும் இடையில், கீழ் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக முழுவதுமாக அவரால் ஐபிஎல் போட்டி விளையாட முடியவில்லை. மொத்தமாக 4 போட்டிகள் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. எனவே, ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள வீரர்களும் போட்டிக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் கே.எல்.ராகுல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் முதல் 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என புதிய தகவல் பரவி வருகிறது. என்ன காரணம்? கே.எல்.ராகுலின் மனைவி கர்ப்பமாக […]
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணிக்காக எடுக்கப்பட்டிருந்தார். இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டனாக பதவியேற்ற பிறகு பேசிய ரிஷப் […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய வீரர்களுக்கான ஏலம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, முன்னதாக ஷ்ரேயஸ் ஐயருக்கு கடுமையான போட்டி நடைபெற்றது, அதில் அவரை ரூ.27.75 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. அது ஐபிஎல் வரலாறாக பேசப்பட்டு வந்த அடுத்த 10 நிமிடத்தில் ரிஷப் பண்ட அதனை மாற்றியிருக்கிறார். அதன்படி, ரிஷப் பண்ட் ஏலத்தில் வந்த போது, பல அணிகளுக்கு […]
கொல்கத்தா : நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயரை அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் விளையாடத் தக்க வைக்கவில்லை. சிறப்பாக விளையாடியபோதும் அவரை அணி நிர்வாகம் தக்க வைக்காதது ரசிகர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் என்ன அவரை பல அணிகள் ஏலத்தில் எடுக்கப் போட்டிப் போடும். அப்படி 5 அணிகள் […]
மும்பை : அடுத்த ஆண்டு ஐபில் தொடருக்கான மேகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கான வேலைகள் தீவிரமாக ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பட்டியலும், விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மிக முக்கிய நட்சத்திர வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த வரிசையில் நட்சத்திர வீர கே.எல். ராகுலும் ஒருவர். […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்காக, 10 அணியிலும் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியானது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் அகர்வால், மோசின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அணியின் கேப்டனாக விளையாடி வந்த […]
லக்னோ : நடைபெற போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு அணியம் தீவிரமாகச் செய்து வருகிறது. மேலும், வரும் அக்டோபர்-31ம் தேதிக்குள் எல்லா ஐபிஎல் அணிகளும், தங்களது அணியில் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனால், அந்த அக்டோபர்-31ம் தேதிக்காகவே ரசிகர்கள் எதிர்பார்ப்பிலிருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில், மறுபக்கம் எந்த அணியில் எந்த வீரர்களைத் தக்க வைக்க […]
சென்னை : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை லக்னோ அணி விடுவிக்கவுள்ளதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி அவரை எடுக்கவுள்ளதாகவும் தீயான தகவல் ஒன்று பரவி கொண்டு இருக்கிறது. அதற்கு, முக்கியமான காரணமே, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா திட்டியது தான். திட்டிய பிறகு அந்த விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு அடுத்ததாக அணியின் உரிமையாளர் கே.எல்.ராகுலை […]
சென்னை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்த நிலையில், லக்னோ அணி பேட்டிங் தான் தோல்விக்கு காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மே 14-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் […]