கர்நாடகாவில் மலர்ந்தது தாமரை – புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு !

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆதரவுடன் பாஜக தலைவர் எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகாவில் எடியூரப்பா 4 வது முறையாக பதவி ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 23 ம் தேதி கர்நாடக சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் மட்டுமே பெற்று முதல்வர்   குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு தோல்வியுற்றது. இதனால், ஆட்சியை பறிபோகி … Read more

இன்று முதல்வராகிறார் எடியூரப்பா! பாஜக தலைமையில் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி!

கர்நாடக சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்தது. ஆதலால் எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் எடியூரப்பா. இதுகுறித்து ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏ சங்கர் தகுதி நீக்கம் – சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு!

கர்நாடக சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினாக இருக்கும் சங்கரை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதன நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த 23ம் தேதி நடந்தது. அப்போது, சுயேச்சை எம்.எல்.ஏ ஆக இருக்கும் சங்கர் பாஜக வுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரித்துள்ளார். மேலும், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 23 ம் தேதி நடந்த … Read more

கவிழ்ந்தது காங்கிரஸ் – மஜக கூட்டணி! மீண்டும் அரியணை ஏறும் பாஜக! யார் அடுத்த முதல்வர்?!

கர்நாடக அரசியலில்  நீடித்து வந்த அரசியல்  குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. நான்கு நாட்களாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை விவாதங்களை தொடர்ந்து நேற்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி 6 மணிநேரம் கழித்து தான் வந்து இருந்தார். அவர் மிகவும் உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார். இந்த அரசின் ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. எனது பதவியை விட்டு எப்போது வேண்டுமென்றாலும் … Read more

பாஜக வெற்றி ; ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி – கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கருத்து !

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்று இருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா ககருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் இன்று இரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 204 வாக்கில் முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே விழுந்துள்ளது. எதிராக 105 வாக்குகள் விழுந்தால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்துள்ளது. இந்நிலையில், … Read more

6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழக்கிறார் குமாரசாமி !

கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்கிறது .நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. சபாநாயகர் தலைமையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் விழுந்துள்ளன. இதனால், 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழக்கிறார். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா காட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் 16 பேர் மும்பையில் … Read more

ஆளுநர் அனுப்பிய கடிதம் என்னை காயப்படுத்திவிட்டது! கர்நாடக முதல்வர் குமாரசாமி வருத்தம்!

கர்நாடகா சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆளும் தரப்பு பேச்சுவார்த்தை அதிகமாக நடத்தி காலதாமதம் ஆனதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்திருந்தனர். அதன் படி, ஆளுநர், சபாநாயகருக்கு, ‘ இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ‘ ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வில்லை. இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், ‘ ஆளுநர் மீது … Read more

ஆளுநர் கொடுத்த கெடுவும் முடிந்துவிட்டது! இன்னும் நடைபெறாத நம்பிக்கை வாக்கெடுப்பு!

கர்நாடக சட்டசபை அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிவருகிறது.  16 எம்எல்ஏக்கள் ராஜினாமா , நம்பிக்கை வாக்கெடுப்பு,  சட்டசபை அமளி என பரபரப்பாக இயங்கி வருகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, பின்னர் ஆளுநரிடம் புகார் அளித்தனர் இதில் ஆளுநர், சபாநாயகரிடம் இன்று மதியம் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். … Read more

கர்நாடகா சபாநாயகர் மீது காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை ஏற்க சபாநாயகருக்கு  உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து ஆட்சி  கவிழும் நிலைமை உருவாகியுள்ளது.இந்நிலையில், இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற சபாநாயகரிடம் கொடுக்க முன்வந்தனர். அவர்களுள்  5 … Read more

நான் ஏன் பதவி விலக வேண்டும் ? – கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நீடிக்க நான் தொடர்ந்து போராடுவேன் என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், நான் ஏன் பதவி விலக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர்களும் தங்களை பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது ஆளும் … Read more