பாலக்காட்டை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த மே 18ம் தேதி 6 பேருடன் சென்னையிலிருந்து காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் அருகே விபத்து ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் மணிகண்டன், சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மணிகண்டன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் மே 20ம் தேதி தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சை கட்டணமாக ரூ.3.25 லட்சத்தையும் அவரது உடலை பாலக்காடு வரை கொண்டு சேர்க்க 25000 ரூபாயையும் அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை […]