சிக்ஸர் அடிப்பாரா எடியூரப்பா?! கர்நாடக இடைதேர்தல் முன்னிலை நிலவரம்!

கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இதில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் பாஜக உள்ளது.  கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதம் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு … Read more

இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் கடிதம்

கர்நாடக சட்டசபை அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிவருகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனால் பாஜக எம்எல்ஏக்கள்  ஆளுநரிடம் புகார் அளித்தனர். இதனால்  ஆளுநர், சபாநாயகரிடம் இன்று மதியம் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ஆனால் மணி 2 ஐ தாண்டியும் இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த நிலையில்  கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று  முதலமைச்சர் குமாரசாமிக்கு … Read more

#Breaking: கர்நாடக எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன்பு இன்று மாலை ஆஜராக வேண்டும் -உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக எம்எல்ஏக்கள் 10பேரும், சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக அரசியலில் பெரும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் (11) மற்றும் மஜத (3) எம்.எல்.ஏ.க்கள் செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்தார்கள்.ஆனால்  கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பினார்.அதில்,5 பேரின் ராஜினாமா கடிதத்தை … Read more

கர்நாடகாவில் மேலும் 2  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா

கர்நாடகாவில் மேலும் 2  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.நாகராஜ் மற்றும் சுதாகர் ஆகிய இரு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் மற்றும்   மதச்சார்பற்ற ஜனதா தள  3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

#Breaking: ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ்-மஜத  எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத  எம்.எல்.ஏ.க்கள் சிலர் ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்தார்கள்.ஆனால்  கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பினார்.அதில், ராஜினாமா கடிதம் அளித்த 13 எம்.எல்.ஏக்களில் 8 பேரின் கடிதம் சட்டப்படி சரியானதாக இல்லை என்றும்  எம்எல்ஏக்கள் என்னை வந்து சந்திக்க நேரம் அளித்துள்ளேன் என்றும் தெரிவித்தார். ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ்-மஜத  எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் .அதாவது சபாநாயகரின் … Read more