அத்திவாரத்தரை தரிசிக்க சென்ற பக்தர்கள் 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் சுமார் 2 லட்சம் பகதர்கள் தரிசிக்க வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கூட்ட நெரிசல் காரணமாக 15 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்துள்ளனர். மயக்கமடைந்த 15 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்திவரதரை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்! தினமும் 3 லாரிகள் அளவிற்கு குப்பைக்கு செல்லும் காலணிகள்!

காஞ்சிபுரம் அத்திவரதரை காண நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம், பக்தர்களை கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்பி, மேற்கு வாசல் வழியாக வெளியே அனுப்பும்படி பாதை வடிவமைத்து உள்ளனர். பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக உள்ளே செல்கையில் காலணிகளை அங்கேயே கழட்டி விட்டு சென்று விடுகின்றனர். கிழக்கு வாசலுக்கும் மேற்கு வாசலுக்கும் இடையே சுமார் ஒன்றரை கிமீ இருப்பதாலும், வெகு நேரம் காத்திருந்து தரிசனம் … Read more