கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும் என கள்ளழகர் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் விழாக்களில், கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இந்த சித்திரை திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. […]