இந்திய வம்சாவளி செவிலியர் ஒருவருக்கு சிங்கப்பூரில் செவிலியர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து வருடம் தோறும் ஐந்து சிறந்த செவிலியர்களுக்கான ஜனாதிபதி செவிலியர் விருது வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வருடம் கொரோனா தொற்றின் போது சிறப்பாகவும் சுறுசுறுப்புடனும் பணியாற்றியதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த கலா நாராயணசாமி என்பவருக்கு இந்த ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது, அதில் ஒருவராக கலா நாராயணசாமியும் இடம்பெற்றுள்ளது […]