மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சில கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.இதற்கிடையில்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவலும் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில்,தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தற்போது தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இக்கூட்டத்தில்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் […]