ஹமாஸ் தலைவரைக் கண்டுபிடித்து ஒழிப்போம்- பாதுகாப்பு அமைச்சர் சபதம்

Yoav Gallant

இஸ்ரேலியப் படைகள் காஸாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது பதுங்கு குழிகள், சுரங்கங்கள் மற்றும் பலவற்றை அழித்து வருகிறது. இந்நிலையில், காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், பாலஸ்தீன மக்களுக்கு பயங்கரவாதக் குழுவின் காசா தலைவர் யாஹ்யா சின்வாரைக் கண்டுபிடித்து இஸ்ரேலிய படைகள் ஒழித்துக் கட்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் எச்சரித்துள்ளார். இதற்கு ஓராண்டு ஆனாலும், இஸ்ரேல் தன் … Read more

இஸ்ரேலுக்காக காசா போர் முனையில் நின்ற இந்திய வம்சாவளி ராணுவ வீரர் மரணம்!

Indian-origin Israeli soldiers killed

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க தொடங்கியது. இந்தப் போர் 27 நாட்கள் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு தாக்கியதில் 20 வயதான இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர் மற்றும் 17 பேர் கொல்லப்பட்டதாக மும்பைக்கான இஸ்ரேல் தூதர் கோபி ஷோஷானி தகவல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இந்திய வம்சாவளியைச் … Read more

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 195 பேர் பலி – ஹமாஸ் தகவல்!

Hamas WAR

ஜபாலியா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தகவல் தெரிவித்துள்னர். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க தொடங்கியது. இந்தப் போர் 27 நாட்களுக்குப் பிறகும் தொடர்கிறது. இப்போது வரை 1400 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இறந்துள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இந்த … Read more

அடுத்து வரும் நாட்களில் சில வெளிநாட்டு பணயக்கைதிகளை விடுவிப்போம்.! – ஹமாஸ் பயங்கரவாதக் குழு

Hamas

ஹமாஸ் பயங்கரவாதக் குழு தாங்கள் அடைத்து வைத்துள்ள பல வெளிநாட்டு கைதிகளை வரும் நாட்களில் விடுவிப்போம் என்று கூறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் கடுமையான போர் நடந்து வருகிறது. இஸ்ரேலின் ராணுவம் ஹமாஸின் இருப்பிடமாக இருக்கும் காசா மீது மூன்று வாரங்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை ராக்கெட் குண்டுகளை வீசி வான்வழி தாக்குதல் மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல், இப்போது தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், … Read more

அகதிகள் முகாமில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..! 50 பேர் பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.!

Israel strikes

இஸ்ரேல் மற்றும் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இந்த போர் தொடர்ந்து 3 வாரமாக நடந்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் உள்ளனர். அதோடு இந்த போரினால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால் பல உலக நாடுகள், இரண்டு தரப்பினரிடமும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் போரை நிறுத்தாமல் தொடர் … Read more

ஹமாஸின் இராணுவத் திறன்களை அழிப்பதில் தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளோம்.! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

Benjamin Netanyahu

தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவை இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமித்த விவகாரத்தில்,  மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் இன்றுவரை ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது. அதன்படி, இஸ்ரேல் மற்றும் … Read more

மக்களை பாதுகாக்க தவறிய நெதன்யாகு! ஹமாஸ் பிடியில் ஊள்ள 3 பெண் பணயக் கைதிகள் கதறும் வீடியோ!

Hostages

230க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ், மூன்று பெண்  பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 3 வாரங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழலே நிலவி … Read more

காசாவில் உள்ள எங்கள் ஊழியர்களுடனான தொடர்பை இழந்துவிட்டோம் – WHO தலைவர்!

WHO Chief israel war

ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போர் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதால், தன்னார்வலர்கள் அமைப்பான WHO, காசாவில் உள்ள தனது சுகாதார ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மனிதாபிமான பங்காளிகளுடன் தொடர்பை இழந்துவிட்டது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 21 நாட்களாக ஓயாமல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. … Read more

காசா மருத்துவமனையின் கீழ் ஹமாஸின் ரகசிய தளம்.! வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்.!

Hamas base

கடந்த அக்டோபர் 7ம் தேதி தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் இன்றுவரை ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் காசா மீதான … Read more

காசா நகரில் அடையாளம் தெரியாத 1,000 பேர் உடல்கள் – WHO தகவல்!

Isael - Hamas War

காசாவில் இன்னும் 1,000 அடையாளம் தெரியாத உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 20 நாட்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், நேற்றைய தினம் முதல் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது. … Read more