கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்திரவு பிறப்பித்துள்ளது . இதில் சென்னை,காஞ்சிபுரம் ,ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கும் .இந்நிலையில் இந்த மாவட்டங்களை தனிமைப்படுத்துவதை பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .